விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிங் மிஷின் பிரிவில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் பணிக்குச் சென்று இயந்திரத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது சேலை சுழலும் கட்டிங் இயந்திரத்தில் சிக்கியது. விநாடி பொழுதில் சேலையோடு சேர்த்து பாண்டியம்மாளையும் இயந்திரம் கொடூரமாக உட்புறமாக இழுத்துச் சென்றது.
இந்த கொடூர விபத்தில் அவரது கை துண்டிக்கப்பட்டு, உடலிலிருந்து அதிக அளவில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சக தொழிலாளர்களின் அலறல் சத்தத்திற்கு இடையே பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலையப் போலிஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…