#image_title
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டு. 1983 ஆம் ஆண்டு இந்தியா முதல்முறையாக உலக கோப்பையை வென்றது. அன்று ஆரம்பித்த இந்த கிரிக்கெட் மோகம் இன்றளவும் ஓயாமல் சென்று கொண்டு தான் இருக்கிறது. கிரிக்கெட்டில் அவ்வபோது பல வீரர்கள் வருவதுண்டு. ஓய்வு பெறுவதுண்டு. அதில் சச்சினில் ஆரம்பித்து கங்குலி, தோனி, விராட் கோலி போன்ற பலர் மிகவும் பிரபலமாக இருக்கிறார்கள்.
இவர்கள் கிரிக்கெட் மட்டுமல்லாது நாட்டின் மிகப்பெரிய பிராண்டுகளின் விளம்பரம் படங்களிலும் நடித்து பல வகைகளில் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி கூட இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் மற்ற நாடுகளில் எந்த கிரிக்கெட் வீரர்களும் இல்லாத அளவுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்போடு இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவரைப் பற்றி இனி காண்போம்.
70,000 கோடி ரூபாய் நிகர மதிப்புடன் உலகின் மிகவும் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை பிடித்திருப்பவர் ஆரியமான் பிர்லா. பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகனான இவர் தான் பணக்கார கிரிக்கெட்டர் ஆவார். ஆரியமான் பிர்லா ஒன்பது முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் அரை சதத்துடன் 414 ரன்கள் குவித்துள்ளார்.
லிஸ்ட் A கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் நான்கு போட்டிகளில் விளையாடி 36 ரன்கள் எடுத்திருக்கிறார். தொடக்கத்திலேயே பலர் கவனத்தை ஈர்த்ததால் இவரை ராஜஸ்தான் அணி வாங்கியது. இரண்டு சீசன்களில் ராஜஸ்தான் அணியில் இருந்தார். இருப்பினும் அவரால் பிளேயிங் 11 இல் இடம் பிடிக்க முயலவில்லை. அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகு சில தனிப்பட்ட காரணங்களால் கிரிக்கெட்டில் இருந்து தனது 22 ஆவது வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஆரியமான் பிர்லா.
அதற்குப் பிறகு அவரது குடும்ப பிசினஸ் ஆன பிர்லா குழுமத்துடன் இணைந்து பல பிசினஸில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இவரது தங்கை அனன்யா பில்லாவுடன் இணைந்து குடும்பத் தொழில்களை கவனித்து வருகிறார். ஆதித்யா பிர்லா மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குனர் பதவிகளை வகித்து வருகிறார் ஆர்யமான் பிர்லா. தற்போது Harvard business பள்ளியில் எம் பி ஏ பட்டத்தையும் படித்து வருகிறார் ஆர்யமான் பிர்லா.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…