திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்களை திமுக தலைமை கழகத் தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போன்ற புதிய கட்சிகளின் ஆட்சியில் ஏதேனும் பதவி கிடைக்குமா என்ற நோக்கில் அவர் இது போன்ற வீண்பழிகளை திமுக மீது சுமத்தி வருவதாகவும் விமர்சித்தார்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக விரும்பியதாக சி.வி. சண்முகம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.எஸ். பாரதி, அதிமுகவினர் குழப்பத்தில் இருப்பதாகவும், அரசியல் ஆதாயத்திற்காகவே இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…