காதலிக்கு ஐபோன் கிப்ட் கொடுக்க காதலன் செய்த விபரீதம்… சிசிடிவியில் போலீஸ் பார்த்த அந்த ஒரு விஷயம்… சென்னையில் நடுராத்திரியில் அரங்கேறிய பரபரப்பு…!

Spread the love

சென்னையில் காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்கிப் பரிசளிப்பதற்காக, சினிமா பாணியில் முகம் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டை மறைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 24 வயது வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ‘மெட்ரோ’ திரைப்படக் கதையை நினைவூட்டும் வகையில் நடந்துள்ள இச்சம்பவம் சென்னை அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு, அண்ணா நகரைச் சேர்ந்த மலர்விழி என்பவர் தனது 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் அமைந்தகரை கெனால் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகத்தில் வெள்ளைக் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவன், இவர்களது வாகனத்தின் மீது மோதுவது போல் வந்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமியின் கழுத்திலிருந்த 1.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினான். இதுகுறித்து மலர்விழி அளித்த புகாரின் பேரில் கீழ்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினர்.

போலீசாருக்கு முதற்கட்ட சவாலாக அமைந்தது குற்றவாளியின் புத்திசாலித்தனமான திட்டமிடல். சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருடன் பயன்படுத்திய பைக்கில் நம்பர் பிளேட் இல்லை என்பதும், அவன் அடையாளத்தை மறைக்க முகமூடியைக் கழற்றாமல் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. மேலும், பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தபோதும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டையைச் சந்தித்தது.

இருப்பினும், போலீசார் சோர்வடையாமல் குற்றவாளி அணிந்திருந்த ‘வரிக்குதிரை’ போன்ற கோடு போட்ட சட்டையை முக்கிய அடையாளமாக எடுத்துக் கொண்டனர். அன்றைய நாள் மதியம் முதல் நள்ளிரவு வரை சென்னை முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளைப் பின்னோக்கி ஆய்வு செய்தனர். அதில், அந்த நபர் மாதவரம், அண்ணா நகர் எனப் பல இடங்களில் செயின் பறிக்க முயன்று தோற்று, இறுதியாக அமைந்தகரையில் தனது கைவரிசையைக் காட்டியது துல்லியமாகக் கண்டறியப்பட்டது. இந்த ‘சட்டை’ அடையாளத்தை வைத்துத் துரத்திய போலீசார், இறுதியாகப் புளியந்தோப்பு பகுதியில் வைத்து அந்தப் பேர்வழியைக் கூண்டோடு தூக்கினர்.

கைது செய்யப்பட்ட நபர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சரவணன் (24) என்பதும், அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல மாலில் துணிக்கடை ஊழியராக வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. செயின் பறிப்புக்கான காரணம் குறித்து அவன் கூறுகையில், தான் உருகி உருகிக் காதலிக்கும் பெண்ணுக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருவதாகவும், அவருக்கு ஐபோன் பரிசளிக்கப் பணம் தேவைப்பட்டதாகவும் கூறினான். பலரிடம் கடன் கேட்டும் கிடைக்காததால், ஒரே நாளில் அதிகப் பணம் சம்பாதிக்கச் செயின் பறிப்பில் இறங்கியதாக ஒப்புக்கொண்டான். அவனிடமிருந்த ஒன்றரை சவரன் நகையையும், பைக் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், அவனைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SATHISH R

Recent Posts

கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி… தூங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில்…

3 minutes ago

60 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை… தமிழக அமைச்சரவையில் மாற்றம்?…. அந்த 7 பேருக்கு கல்தா…. விஜய் கையில் இருக்கும் அந்த ரகசிய லிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய திருப்பமாக, தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக…

5 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…

14 minutes ago

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

19 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

20 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

32 minutes ago