“கறிக்கடையில் கூட இப்படி வெட்ட மாட்டாங்க”…. 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள்?… சட்டசபையில் பொங்கி எழுந்த உதயநிதி… அலறிய பேரவை….!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நாளுக்கு நாள் சீர்குலைந்து வரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை குறித்து அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நாள்தோறும் செய்தித்தாள்களைத் திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற செய்திகளே நிறைந்துள்ளதாகக் சுட்டிக்காட்டிய அவர், “கறிக்கடைகளில் கூட இவ்வளவு வெட்ட மாட்டார்கள், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் தினசரி வெட்டு குத்து சம்பவங்கள் அஞ்சாமல் நடந்து கொண்டிருக்கின்றன” என்று மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.

நாட்டில் நடைபெறும் தொடர் குற்றச் சம்பவங்களைக் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்ட உதயநிதி, நகைக்காகக் கொலை, போதைப்பொருள் விற்பனையைத் தட்டிக்கேட்பவர்கள் மற்றும் அம்பலப்படுத்துபவர்கள் மீதான தாக்குதல், மதுபோதையில் நடக்கும் மோதல்கள் எனத் தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்ற அவலநிலை நிலவுவதாகக் குறிப்பிட்டார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் 9 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதாகவும், தற்போதைய ஆட்சி அமைந்த இந்த 116 நாட்களில் சுமார் 10 ஆணவக் கொலைகள் அரங்கேறியுள்ள போதிலும் முதலமைச்சர் இதுகுறித்துப் பேசாமல் மௌனம் காப்பதாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னதாக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு குறித்துப் பேசியவர்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பொறுப்பேற்காமல் தனிநபர் ஒழுக்கம் குறித்துப் பாடம் எடுப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைக் கடுமையாகக் விமர்சித்தார். குற்றவாளிகள் மீதும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீதும் அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

Nanthini

Recent Posts

“ஈரான் மொத்தமும்… எங்கள் அனுமதியின்றி கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது…” டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…

4 minutes ago

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

26 minutes ago

“கடவுளே இப்படியா ஆகணும்…?” அரசு பஸ்ஸை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்… தாய், மகள் உயிரைப் பறித்த பள்ளிப் பேருந்து… பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…

38 minutes ago

“தொழிலதிபர் கணவர் பிணமாக காரில் சாய்ந்திருக்க…” அருகில் ஐடி காதலனுடன் மனைவி ஆடிய பயங்கர நாடகம்…! மிரண்ட போலீசார்…. வெளியான பகீர் பின்ணணி…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…

45 minutes ago

கூட்டணி வைத்தது தப்பா போச்சா?… பொறுமை இழந்து முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… ஸ்தம்பித்த தமிழக அரசியல்….!

த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…

56 minutes ago

“யாரும் எழுந்திருச்சி ஓடிடக் கூடாது”…. உதயநிதிக்கு முதல்வர் விஜய் வைத்த ஓபன் சேலஞ்ச்…. சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்….!

தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும்…

1 மணத்தியாலம் ago