கூட்டணி வைத்தது தப்பா போச்சா?… பொறுமை இழந்து முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… ஸ்தம்பித்த தமிழக அரசியல்….!

Spread the love

த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் வெளி ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்றார். இருப்பினும், ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே கொள்கை முடிவுகள், நிதி ஒதுக்கீடு மற்றும் அன்றாட நிர்வாகத்தில் கூட்டணிக் கட்சிகள் செலுத்தும் கடுமையான ஆதிக்கம் முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் அரசியல் சுமையாக மாறியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு, சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மையை நிலைநாட்ட தவெக தலைமை தற்போது தீவிரமான புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.

தற்போது ஆளுங்கூட்டணிக்குள் நாளுக்கு நாள் விரிசல்கள் தீவிரமடைந்து வருவது கோட்டை வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெருவில் இறங்கிப் போராடியுள்ள நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை எச்சரித்துள்ளது. மற்றொருபுறம் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் கூடுதல் அதிகாரம் கேட்டு விசிக அழுத்தமளிக்கிறது. மேலும், தேசிய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் காங்கிரஸ் முன்னிறுத்தும் நிலையில், வட மாநிலங்களில் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பிரச்சாரங்கள் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் உராய்வை உருவாக்கியுள்ளன.

இந்த அரசியல் சவால்களுக்கு மத்தியில், சட்டமன்றத்தின் தற்போதைய பலப் பரீட்சை கணக்குகள் சுவாரசியமான மாற்றங்களைச் சந்தித்துள்ளன. தேர்தலில் வென்ற விஜய் தனது திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாகி, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 227 ஆகக் குறைந்துள்ளது. இந்தச் சூழல் தவெகவுக்கான பெரும்பான்மை இலக்கை சற்று எளிதாக்கியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவின்றிச் சுதந்திரமாக இயங்கத் தனிப் பெரும்பான்மை மிக அவசியமாகிறது.

கூட்டணிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட இடைத்தேர்தல்களை உடனடியாக நடத்துவதே ஒரே வழி என விஜய் தரப்பு கருதுகிறது. காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதைத் தேர்தல் வழக்குகளைக் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை உடனடியாக நீக்கக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரப்பட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட ரீதியான தடைகளை உடைத்து விரைவில் இடைத்தேர்தலை எதிர்கொள்வதில் தவெக வேகம் காட்டி வருகிறது.

வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் காலியாக உள்ள அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலம், சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மைக்கான 118 இடங்கள் என்ற இலக்கை மிக நெருங்கிவிட முடியும் என்று தவெக வியூகவாதிகள் கணக்கிடுகின்றனர். இந்த இலக்கு எட்டப்பட்டால், காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளின் நிபந்தனைகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய கட்டாயம் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும். கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல்களைத் தாண்டி, சொந்த பலத்தில் ஆட்சியை நிலைநிறுத்த விஜய் கையில் எடுத்துள்ள இந்த ‘இடைத்தேர்தல் அஸ்திரம்’ தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அக்காவுடன் இருந்த போலீஸ்காரர்…! “கண்டித்த தங்கையின் முகத்தை சிதைத்து…” மாமனாருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…

8 minutes ago

“வேறு பெண்ணுடன் தொடர்பு.. 17 வயது சிறுமியுடன் காதல்…” கடத்தி சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்… நண்பருடன் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…

18 minutes ago

“ஈரான் மொத்தமும்… எங்கள் அனுமதியின்றி கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது…” டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…

32 minutes ago

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

53 minutes ago

“கடவுளே இப்படியா ஆகணும்…?” அரசு பஸ்ஸை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்… தாய், மகள் உயிரைப் பறித்த பள்ளிப் பேருந்து… பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…

1 மணத்தியாலம் ago

“தொழிலதிபர் கணவர் பிணமாக காரில் சாய்ந்திருக்க…” அருகில் ஐடி காதலனுடன் மனைவி ஆடிய பயங்கர நாடகம்…! மிரண்ட போலீசார்…. வெளியான பகீர் பின்ணணி…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…

1 மணத்தியாலம் ago