“தொழிலதிபர் கணவர் பிணமாக காரில் சாய்ந்திருக்க…” அருகில் ஐடி காதலனுடன் மனைவி ஆடிய பயங்கர நாடகம்…! மிரண்ட போலீசார்…. வெளியான பகீர் பின்ணணி…!!

Spread the love

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர், சரபங்கா ஆற்றுப்பகுதியில் காரின் முன்சீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சுஜிதாஸ்ரீ, மர்ம நபர்கள் வந்து தன் கணவரைக் கொன்றுவிட்டுத் தனது நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டதாகப் போலீசாரிடம் கூறி கதறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தபோது, கார் மற்றும் மனைவியின் உடலில் எந்தவிதமான ரத்தக் கறையோ காயங்களோ இல்லாததால் சந்தேகம் அடைந்து சுஜிதாஸ்ரீயிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சுஜிதாஸ்ரீக்கு எதிரே வசித்து வரும் பெங்களூரு ஐடி ஊழியரான சந்தோஷ் ராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது அம்பலமானது.

கள்ளக்காதல் விவகாரம் கணவர் பூபதிக்குத் தெரியவந்ததால் ஏற்பட்ட தகராறில், பூபதியைத் தள்ளிவிட்டு மயக்கமடையச் செய்த சுஜிதாஸ்ரீ, காதலன் சந்தோஷ் ராஜை வரவழைத்துக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் கணவரின் உடலைக் காரின் முன்சீட்டில் அமர வைத்து ஆற்றுப்பகுதிக்குக் கொண்டு சென்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சுஜிதாஸ்ரீயைப் போலீசார் கைது செய்த நிலையில், அவரது காதலன் சந்தோஷ் ராஜிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

அக்காவுடன் இருந்த போலீஸ்காரர்…! “கண்டித்த தங்கையின் முகத்தை சிதைத்து…” மாமனாருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…

9 minutes ago

“வேறு பெண்ணுடன் தொடர்பு.. 17 வயது சிறுமியுடன் காதல்…” கடத்தி சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்… நண்பருடன் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…

19 minutes ago

“ஈரான் மொத்தமும்… எங்கள் அனுமதியின்றி கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது…” டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…

32 minutes ago

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

54 minutes ago

“கடவுளே இப்படியா ஆகணும்…?” அரசு பஸ்ஸை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்… தாய், மகள் உயிரைப் பறித்த பள்ளிப் பேருந்து… பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…

1 மணத்தியாலம் ago

கூட்டணி வைத்தது தப்பா போச்சா?… பொறுமை இழந்து முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… ஸ்தம்பித்த தமிழக அரசியல்….!

த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…

1 மணத்தியாலம் ago