கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு அல்லது உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொய் பித்தலாட்டங்களால் கட்டி எழுப்பப்பட்ட திமுக அரசியல் குறுதெலும்பு நொறுங்குமாறு பொட்டு வைக்கவும் உச்ச நீதிமன்றம் தவறவில்லை என்று எச். ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், போய் பித்தலாட்டங்களால் கட்டியெடுக்கப்பட்ட திமுக அரசின் குறுத்தெலும்பு நொறுங்குமாறு குட்டு வைக்கவும் தவறவில்லை. இந்த வழக்கு எத்தனை அவசரமாக ஜோடிக்கப்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை முன் வைத்ததில் நன்றாக தெரிகிறது.
பெரும் மக்கள் திரளக்கூடிய பிற அரசியல் கூட்டங்களுக்கு குறுகலான சந்துகளை கொடுப்பது, முதல்வரை தவிர மற்ற தலைவர்களின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட ஆளும் அரசின் பல அயோக்கியத்தனங்கள் நீதிமன்றங்களின் தயவால் ஒவ்வொன்றாக மக்கள் மத்தியில் அம்பலப்பட தொடங்கியுள்ளது. சிக்குண்ட அறிவாலய உடன்பிறப்புகள் ஆளுக்கு ஒரு புறம் சிதறி ஓட தொடங்கியுள்ளனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க பார்க்க திகட்டவில்லை என்று எச் ராஜா தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு தெரிவித்துள்ளது திமுகவில் இருக்கும் உடன்பிறப்புகள் இடையே ஏதோ ஒரு மோதல் நிலவி வருவதை வெளிகாட்டுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…