விஜய் செய்த வரலாற்றுத் தவறு?… கடைசி நேரத்தில் தவெக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மொத்தமாக ஸ்கோர் செய்த ஸ்டாலின்…!

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக திமுக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுடன் தவெக மற்றும் நாதக ஆகிய கட்சிகளும் மல்லுக்கட்டி வருகின்றன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது இறுதிக்கட்டப் பிரச்சார உத்திகளில் மிக முக்கியமான ஒரு வாய்ப்பைத் தவறவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஒரு நேர்காணல் கூட வழங்காமல் அவர் மௌனம் காப்பது கட்சியின் வளர்ச்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் சாமானிய மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் ஸ்டாலினின் நேர்காணல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை டிஜிட்டல் தளங்களில் மிகத்தீவிரமாகப் பரப்பி வருகின்றன. ஆனால், தவெக தரப்பில் கொள்கை விளக்கங்களோ அல்லது தேர்தல் வாக்குறுதிகளோ அந்தளவுக்குத் தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை. வேட்பாளர்களும் இந்த டிஜிட்டல் போட்டியில் சற்றுப் பின்தங்கியே காணப்படுகின்றனர்.

விஜய் ஒரு நேர்காணல் அளித்திருந்தால், அது பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்து கட்சியின் பலத்தை அதிகரித்திருக்கும். தனது கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்குக் கூட அவர் ஒரு பேட்டி அளித்திருக்கலாம். அரசியல் வருகைக்கான நோக்கம் முதல் எதிர்காலத் திட்டங்கள் வரை அவர் நேரடியாகப் பேசியிருந்தால், அது கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு தெளிவைத் தந்திருக்கும். திமுக மற்றும் பாஜக மீதான தனது விமர்சனங்களை வலுவாக முன்வைக்கக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இதன்மூலம் அவர் நழுவவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை விஜய் செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆங்கில ஊடகங்களைச் சந்தித்தபோதும் கூட அவை ‘ஆஃப் கேமரா’ உரையாடல்களாகவே முடிந்துவிட்டன. தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் தருவாயிலும் இந்த மௌனம் நீடிப்பது, வாக்காளர்களின் மனதில் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த யுக்தி விஜய்க்கு கைகொடுக்குமா அல்லது பலவீனமாக மாறுமா என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரியவரும்.

Nanthini

Recent Posts

பகீர்… சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன்.. குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்.. கத்தியை வாஷ்பேஷனில் கழுவிய கொடூரம்…!!

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூரகாவு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுரேஷ் என்பவருக்கும், மன்னாந்தலை பகுதியைச் சேர்ந்த 36…

7 minutes ago

அதிமுகவினர் தவெகவில் இணைய EPS தான் காரணம்… ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு..!

அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ்…

14 minutes ago

3 வருட காதலுக்கு ‘Breakup’ சொன்ன காதலி..! அலுவலகத்திற்குள் புகுந்து.. கத்தியால் குத்திக்கொன்ற கொடூர காதலன்… தானும் தற்கொலை முயற்சி…!!

மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 30 வயதுப் பெண்ணான டிம்பிள், கடந்த வியாழக்கிழமை மாலை அவரது…

33 minutes ago

டெல்லியை உலுக்கிய ‘காக்கரோச் ஜனதா கட்சி’… ஜந்தர் மந்தரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்.. ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி…!

இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…

51 minutes ago

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்…!

மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

57 minutes ago

சைலண்டாக முடிந்த சாவி விவகாரம்… CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…

1 மணத்தியாலம் ago