3 வருட காதலுக்கு ‘Breakup’ சொன்ன காதலி..! அலுவலகத்திற்குள் புகுந்து.. கத்தியால் குத்திக்கொன்ற கொடூர காதலன்… தானும் தற்கொலை முயற்சி…!!

Spread the love

மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 30 வயதுப் பெண்ணான டிம்பிள், கடந்த வியாழக்கிழமை மாலை அவரது முன்னாள் காதலனான ஹர்விந்தர் மான் என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டியாலாவைச் சேர்ந்த டிம்பிள் மற்றும் ஹர்விந்தர் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தில் ஒன்றாகப் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் முன்பு காதல் உறவில் இருந்ததாகவும், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவிற்குப் பிறகு ஹர்விந்தர் மீண்டும் தனது காதலைப் புதுப்பிக்க முயன்று வந்த நிலையில், டிம்பிள் அவரிடமிருந்து விலகியே இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், வியாழக்கிழமை மாலை அலுவலகத்தில் டிம்பிள் பணியில் இருந்தபோது அங்கு சென்ற ஹர்விந்தர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.

டிம்பிளைத் தாக்கிய பின்னர் ஹர்விந்தர் அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டிம்பிள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற ஹர்விந்தர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஹர்விந்தரின் உடல்நிலை சீரானதும் அவரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணையைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Swetha

Recent Posts

அடேங்கப்பா!.. பிரம்மாண்ட ஏற்பாடு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு செம்ம அடி.. டிராக்டரிலேயே ‘ஸ்விம்மிங் பூல்’ அமைத்து வலம் வரும் மாஸ் வாலிபர்.. வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…

3 minutes ago

“ஒரே ஒரு மேயர் சீட் ஜெயிச்சு காட்டுங்க உதயநிதி..!” – தவெக ஆதவ் அர்ஜுனா விடுத்த நேரடி சவால்..!  எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்…!!

விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…

11 minutes ago

அடேங்கப்பா!.. நம்ம ஊர் ஆளுங்க மூளையே தனி தான்.. வெறும் ஒரு ஓட்டை தட்டை வைத்து இளைஞர் செய்த மேஜிக்.. நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ..!

சமூக ஊடக உலகில் ஒவ்வொரு நாளும் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு விதமான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்று வழி…

14 minutes ago

“உலகையே உலுக்கிய இங்கிலாந்து நாடாளுமன்ற விவாதம்!.. 700 பேர் சேர்ந்து இளம்பெண்ணுக்கு செய்த கொடூரம்.. எம்பி வெளியிட்ட மரண பயங்கர தகவல்”..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச்…

21 minutes ago

ஹோட்டலில் 21 பேர் கருகி சாம்பலான கொடூரம்… இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 65 உயிர்கள் பலி.. டெல்லியில் என்ன நடக்கிறது…?

டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…

22 minutes ago

“அஸ்தி கரைக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்.. லாரியுடன் நேருக்கு நேர் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணம்.. பஞ்சாபில் நேர்ந்த பெரும் சோகம்”..!!

இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது…

30 minutes ago