“டேய் கிழவா நீ செத்துப் போடா”… நிலத்தகராறில் தந்தையின் மார்பை குத்தி கிழித்த மகன்… நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமம் பகுதியை சேர்ந்த முத்துவேல் (60) என்பவர் அதே பகுதியில் உள்ள அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கும் இவருடைய அண்ணன் மகனான குப்புசாமிக்கும் அவர்களுடைய பூர்வீக நிலத்தை பங்கு பிரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இரண்டு குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளன. இந்நிலையில் ஒரே பகுதியில் வசிக்கும் அண்ணன் மகன் குப்புசாமிக்கும் முத்துவேலுக்கும் இடையே நில தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அப்பம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் செய்துள்ளனர்.

அதனைப் போலவே நேற்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். அதில் ஆத்திரம் அடைந்த குப்புசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சித்தப்பா முத்துவேலுவின் மார்பகத்தின் மீது சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்த முத்துவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமுறைவாக உள்ள குப்புசாமியை தேடி வருகின்றனர். நில தகராறில் அண்ணன் மகனே தன்னுடைய சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“பாசிசத்திற்கு அடிபணிய மாட்டேன்!” தமிழக மக்களுக்கு எழுதிய பரபரப்பு கடிதம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…

4 minutes ago

BREAKING: ரூ.2.44 கோடி சிக்கியது..? இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..? பெரும் பரபரப்பு.!!

பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…

32 minutes ago

“45 பந்து.. 101 ரன்கள்” குஜராத்தை கதறவிட்ட திலக் வர்மா… தம்பியின் சதத்தை அண்ணனாகக் கொண்டாடிய பாண்டியா..!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…

36 minutes ago

சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்.. தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தொழிலாளர் துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

39 minutes ago

EPFO 3.0 அப்டேட்…! 75% வரை பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கலாம்…. புதிய ரூல்ஸ் என்ன சொல்லுது…?

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…

44 minutes ago

புது ஷூ கேட்ட தம்பி… கோபத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த அண்ணன்… ஒரு நொடி ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…

51 minutes ago