தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவுக்கு ஏராளமான போட்டிகள் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை நிலை நாட்டுவதில் இபிஎஸ் கவனம் செலுத்தி வருகின்றார். அதேசமயம் கட்சியில் தனக்கு எதிராக போர் கொடி தூக்கும் நிர்வாகிகளையும் மொத்தமாக கட்சியிலிருந்து இபிஎஸ் தூக்கி வீசுகிறார். சமீபத்தில் கூட செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் ஐக்கியமான ஒன்றிய செயலாளர் பொன். சிவா மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி சிவி சண்முகம் வரவேற்றார். திமுகவில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் முன்னிலையில் இரவோடு இரவாக அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…