தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவுக்கு ஏராளமான போட்டிகள் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை நிலை நாட்டுவதில் இபிஎஸ் கவனம் செலுத்தி வருகின்றார். அதேசமயம் கட்சியில் தனக்கு எதிராக போர் கொடி தூக்கும் நிர்வாகிகளையும் மொத்தமாக கட்சியிலிருந்து இபிஎஸ் தூக்கி வீசுகிறார். சமீபத்தில் கூட செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் ஐக்கியமான ஒன்றிய செயலாளர் பொன். சிவா மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி சிவி சண்முகம் வரவேற்றார். திமுகவில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் முன்னிலையில் இரவோடு இரவாக அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
