Categories: சினிமா

என்னிடம் வேலை செய்ற இயக்குனர்கள் எந்த கதை சொன்னாலும் என் பதில் இதுதான்.. எங்கிட்ட கதை சொல்றது ரொம்ப கஷ்டம்.. இயக்குனர் வெற்றிமாறன் பளீச்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். இப்படியான நிலையில் வெற்றிமாறன் உதவி இயக்குனர் வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் திரைப்படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று பேட் கேர்ள் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், எப்போதுமே என் கூட வேலை செய்றவங்க இந்த ஐடியா இருக்கு, அந்த ஐடியா இருக்குன்னு சொல்லிட்டு இருப்பாங்க. நான் ஒரு கடுமையான விமர்சகர். கதை நல்லா இருக்கு, ஆனா படமா வராது, கதை வெர்க் ஆகலன்னு நிறைய சொல்லுவேன். எங்கிட்ட ஒருத்தர் வந்து கதை சொல்ல வேண்டும் என்றால் நிறைய தைரியம் தேவை. எல்லாத்தையும் மீறி சொன்னாலும் நான் நல்லா இல்லன்னு தான் பெரும்பாலும் சொல்லுவேன். எடுத்த உடனேயே நல்லா இல்லை என்று சொல்லவில்லை என்றாலும் கொஞ்ச நாள் கழிச்சு ஆவது சொல்லிடுவேன்.

வர்ஷா என்கிட்ட ரெண்டு மூணு ஐடியா சொல்லிட்டு இந்த ஐடியாவை வந்து சொல்லும்போதே , இத நாங்க செட் பண்ணிட்டோம். அமேசான் இதை பண்றாங்க. ஆனா அவங்க ஒரு புரொடக்ஷன் ஹவுஸ் மட்டும் கேக்குறாங்கன்னு சொன்னாங்க. அதனால இந்த படத்துல கடைசியா வந்து சேர்ந்தது நான்தான். சில மாற்றங்களால் அமேசான் இந்த படத்தை பண்ணல. அந்த சமயத்துல அனுராக் சென்னை வந்திருந்தார். அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம் என்று இந்த படம் தொடங்கியது. பிறகு அவருக்கு வேற வேலை வந்ததால நாங்க கடைசியா பண்ணனும். இந்த படத்துல என்னோட கிரியேட்டிவ் பங்களிப்பு ரொம்ப கம்மி தான். ஆர்டிஸ்ட் பரிந்துரை மாதிரியான விஷயங்கள் மட்டும் தான் நான் பண்ண வேண்டியதாக இருந்தது என்று வெற்றிமாறன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

13 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

23 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

32 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

41 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

51 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

1 மணத்தியாலம் ago