தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். இப்படியான நிலையில் வெற்றிமாறன் உதவி இயக்குனர் வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் திரைப்படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று பேட் கேர்ள் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், எப்போதுமே என் கூட வேலை செய்றவங்க இந்த ஐடியா இருக்கு, அந்த ஐடியா இருக்குன்னு சொல்லிட்டு இருப்பாங்க. நான் ஒரு கடுமையான விமர்சகர். கதை நல்லா இருக்கு, ஆனா படமா வராது, கதை வெர்க் ஆகலன்னு நிறைய சொல்லுவேன். எங்கிட்ட ஒருத்தர் வந்து கதை சொல்ல வேண்டும் என்றால் நிறைய தைரியம் தேவை. எல்லாத்தையும் மீறி சொன்னாலும் நான் நல்லா இல்லன்னு தான் பெரும்பாலும் சொல்லுவேன். எடுத்த உடனேயே நல்லா இல்லை என்று சொல்லவில்லை என்றாலும் கொஞ்ச நாள் கழிச்சு ஆவது சொல்லிடுவேன்.
வர்ஷா என்கிட்ட ரெண்டு மூணு ஐடியா சொல்லிட்டு இந்த ஐடியாவை வந்து சொல்லும்போதே , இத நாங்க செட் பண்ணிட்டோம். அமேசான் இதை பண்றாங்க. ஆனா அவங்க ஒரு புரொடக்ஷன் ஹவுஸ் மட்டும் கேக்குறாங்கன்னு சொன்னாங்க. அதனால இந்த படத்துல கடைசியா வந்து சேர்ந்தது நான்தான். சில மாற்றங்களால் அமேசான் இந்த படத்தை பண்ணல. அந்த சமயத்துல அனுராக் சென்னை வந்திருந்தார். அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம் என்று இந்த படம் தொடங்கியது. பிறகு அவருக்கு வேற வேலை வந்ததால நாங்க கடைசியா பண்ணனும். இந்த படத்துல என்னோட கிரியேட்டிவ் பங்களிப்பு ரொம்ப கம்மி தான். ஆர்டிஸ்ட் பரிந்துரை மாதிரியான விஷயங்கள் மட்டும் தான் நான் பண்ண வேண்டியதாக இருந்தது என்று வெற்றிமாறன் பேசியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில்,…
மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களிடையே மிகவும் பிரபலமான 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.…
சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ரோடுஷோவை பாதியில் முடித்துவிட்டு யாரிடமும் பேசாமல்…
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய இறுதிவட்டக்…