Categories: சினிமா

ரஜினியை வைத்து படம் இயக்க முடியுமா என கேட்ட லைகா உரிமையாளர்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பிரபல நடிகர்..!

Spread the love

நடிகர் பிரித்விராஜ் தயாரிப்பு மற்றும் நடிப்பு என அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுத்தி வரும் நிலையில் இயக்குனராகவும் அவர் சிறப்பான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகின்றார். அதன்படி மோகன்லால் வைத்து அவர் முன்னதாக கொடுத்திருந்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாவது பாகமாக தற்போது எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கி முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை பான் இந்தியா படமாக இயக்குனர் உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வருகின்ற மார்ச் 27ஆம் தேதி இந்த திரைப்படம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. லூசிபர் திரைப்படத்தில் மோகன்லாலின் உதவியாளர் சையத்தாக பிரித்விராஜ் நடித்திருந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள எம்புரான் படத்திலும் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதை டீசர் மூலம் பார்க்க முடிகிறது. நேற்று நடந்த டீசர் ரிலீஸ் நிகழ்ச்சியில் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் மம்முட்டி, மஞ்சு வாரியர் மற்றும் டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய பிரித்விராஜ், ஒரு நாள் எதார்த்தமாக அடுத்து என்ன செய்ய போறீங்க என்று லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் சார் என்கிட்ட கேட்டாரு. லூசிபரின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கப் போறேன் என்று கூறினேன். அப்போது என்னிடம் உங்களின் கனவு படத்தில் நான் எப்படி ஒரு அங்கமாக இருப்பது என்று கேட்டார். அதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படிதான் இந்த படத்தில் லைவா நிறுவனம் ஒரு அங்கமாக மாறியது.

மலையாளத்தில் லைகாவின் முதல் படம் இது என்பது கூடுதல் சிறப்பு. சுபாஷ்கரன் தன்னிடம் எங்கள் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு அதை மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால் பகுதி நேர இயக்குனரான என்னால் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினி சாருக்கு கதை தயார் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். அதே நேரத்தில் சுபாஸ்கரன் சாருடனான நட்பு வளர்ந்துள்ளது என்று பிரித்விராஜ் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

29 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

43 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

47 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

51 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

55 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

58 minutes ago