தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எத்தனையோ திரைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படக்கூடிய திரைப்படங்கள் வெகு சில மட்டுமே. அந்த வரிசையில் இடம் பிடித்த திரைப்படம் தான் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து பாக் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்து வெளியிட்ட காக்கா முட்டை திரைப்படம். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதுடன் பல்வேறு வசூல் சாதனைகளையும் செய்தது. எம். மணிகண்டன் இயக்கிய இந்த திரைப்படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.
அதேசமயம் இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் நல்ல புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ ஏற்றுக்கொண்டது. ஒரு சிறிய கதைக்களத்தைக் கொண்டு உருவான இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. ஆனால் இந்த திரைப்படம் உருவாவதற்கு முன்பு இயக்குனர் மணிகண்டன் பெரிய சிக்கல்களை எல்லாம் சந்தித்துள்ளார். அதாவது மணிகண்டன் இந்த கதையை சொல்லாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முடிந்த அளவிற்கு அனைவரிடமும் சொல்லிவிட்டார்.
ஆனால் கதை ரொம்ப சின்னதா இருக்கு குறும்படமாக எடுக்கலாம் என்று கூறி யாருமே இந்த படத்தை எடுக்க முன்வரவில்லை. இறுதியாக ஒரு தயாரிப்பாளர் முன்வந்து படத்தை எடுக்கலாம் என்று கூறிவிட்டு மணிகண்டனுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளார். சரி என்று சம்மதித்த மணிகண்டன் படத்தை எடுப்பதற்கான வேலையை பார்த்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த தயாரிப்பாளர் கதை நல்லா தான் இருக்கு இதுல கொஞ்சம் காதல் கதையை சேர்த்தால் நல்லா இருக்கும் என்று கூறி உனக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் தருகிறேன் கதையை மட்டும் கொஞ்சம் மாற்று என கூறியுள்ளார்.
உடனே மணிகண்டன் தன் படத்தின் கதையை கெடுப்பதாக நினைத்து அங்கிருந்து வெளியேறி விட்டார். அதன் பிறகு நல்ல மனசோடு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரிக்க இந்த படம் மணிகண்டன் நினைத்தது போல மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…