Categories: சினிமா

அப்படி ஒரு பாட்டை நான் இயக்கவே மாட்டேன்.. படப்பிடிப்பின் பாதியிலேயே கிளம்பிய இயக்குனர் கே.பாலச்சந்தர்..!

Spread the love

தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தவர் தான் கே.பாலசந்தர். இயக்குனர் சிகரம் என்று அனைவராலும் கொண்டாடப்படும் இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இவர் சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரை அணுகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் சிவாஜி நடிப்பில் ஒரு திரைப்படத்தை மட்டுமே இயக்கி இருந்தார். எதிரொலி என்ற பெயரில் வெளியாகி இருந்த இந்த படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. ஆரம்பத்தில் தன்னுடைய படங்களுக்கு தான் நாடகங்களில் பணியாற்றும்போது நெருங்கிய நட்புடன் இருந்த வி. குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு எம் எஸ் விஸ்வநாதன் உடன் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 1970 காலகட்டத்தின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பு பெற்று வந்த காலகட்டத்திலும் பாலசந்தர் எம்எஸ்சியுடன் பணியாற்றிய பல வெற்றிகளை குவித்தார். அடுத்து சில ஆண்டுகளில் இளையராஜாவுடன் இணைந்து பிறகு அவரை விட்டுப் பிரித்து ஏ ஆர் ரகுமான இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இந்த கூட்டணியில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டூயட். பிரபு மற்றும் ரமேஷ் அரவிந்த் இணைந்து நடித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து இயக்கியுள்ளார்.

பொதுவாக தன்னுடைய படங்களில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பாலசந்தர் சண்டை காட்சிகள் மற்றும் கிண்டல் செய்வது போன்ற பாடல்களை இடம்பெற அனுமதிப்பதில்லை. ஆனால் டூயட் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவருடைய உதவி இயக்குனர்கள் பாலசந்தரிடம் பல ஆலோசனைகளை கூறியுள்ளனர். நீங்கள் அந்த காலத்தில் எடுத்தது போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது இந்த படம் கமர்சியலா வெற்றி பெற வேண்டும் என்றால் சண்டை காட்சிகள் எடுக்க வேண்டும் அதனைப் போலவே கிண்டல் செய்வது போன்ற இந்த பாடல் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதில் உடன்பாடு இல்லாத பாலசந்தர் படத்தின் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டும் படமாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்ப அவருடைய உதவியாளராக இருந்த இயக்குனர் சரண் சண்டை காட்சிகள் மற்றும் கத்திரிக்கா குண்டு கத்திரிக்காய் என்ற கிண்டல் செய்யும் பாடல் காட்சிகளை இயக்கியுள்ளார். அதனைப் போலவே தன்னுடைய படத்தின் பாடல்களில் வரிகளுக்கு முக்கியத்துவம் தரும் பாலசந்தர் இந்த படத்தில் வரும் தங்கமே தமிழுக்கில்லை கட்டுப்பாடு என்ற பாடலை எழுதும்போது கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டதை தொடர்ந்து உங்கள் விருப்பத்திற்கு எழுதுங்கள் என கூறியுள்ளார். அந்த வகையில் வைரமுத்து தனக்கு தோன்றிய வரிகளை அமைத்து எழுதிய பாடல் தான் இது. இந்தப் படமும் பாடலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Nanthini

Recent Posts

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

3 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

10 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

13 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

18 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

19 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

20 minutes ago