CINEMA
17 ஆண்டுகளாக இதை யாரிடமும் நான் சொல்லவில்லை, என் மனைவி ஆசைப்பட்ட அந்த விஷயம் – சிவக்குமார் குறித்து பேசிய இயக்குநர் அமீர்
நடிகர் அமீர், இப்போது மாயவலை என்ற படத்தை தயாரித்து, இயக்கி இருக்கிறார். அந்த படத்தின் பிரமோவுக்கான நேர்காணல் ஒன்றில் நடிகர் சித்ரா லட்சுமணனை சந்தித்து அவர் பேசியதாவது, ஆல்பர்ட் தியேட்டருக்கு நான் ஒரு வேலையாக சென்ற போது நடிகர் சிவக்குமார், பாக்ஸில் அமர்ந்து ராம் படம் பார்த்துக்கொண்டு இருப்பதாக எனக்கு சொன்னார்கள். இடைவேளையில் சென்று சந்தித்தேன். சிவக்குமார் சார், அவர்கள் பேமிலி இருந்தனர். படம் பார்த்துவிட்டு அழைப்பதாக சொன்னார். நேரில் சென்ற போது என்னிடம் அவர் கேட்டுக்கொண்டதால், பருத்தி வீரன் படம் பண்ணினேன்.
இதுவரை 17 ஆண்டுகளாக யாரிடமும் சொல்லாத ஒரு விஷயத்தை இப்போது சொல்கிறேன். என் மனைவிக்கும், சினிமாவுக்கும் ரொம்ப தூரம். எந்த நடிகர், நடிகையையும் பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது கிடையாது. ஆனால் பருத்திவீரன் படம் எடுத்துக்கொண்டிருந்த போது அவர் என்னிடம் கேட்ட விஷயம், நடிகர் சிவக்குமார் சாரை, ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்றார். பருத்திவீரன் படம் முடியட்டும், அழைத்துச் செல்கிறேன் என என் மனைவியிடம் கூறியிருந்தேன். ஆனால் படம் முடிந்த பிறகு பல பிரச்னைகள் ஆகி விட்டது.
இப்படி என் மனைவி, உங்களை பார்க்க ஆசைப்படுகிறார் என, சிவக்குமார் சாரிடமும் இதுவரை நான் சொல்லவில்லை. அவரை சிவக்குமாரிடம் ஏன் அழைத்துச் செல்லவில்லை என்பதை என் மனைவியிடமும் இதுவரை சொல்லவில்லை. எனக்கு சிவக்குமாரை ரொம்ப பிடிக்கும். அதனால்தான் அவர் கேட்டதால், என்னால் மறுக்க முடியாமல் படம் பண்ணினேன். அதுபோல், என் மனைவியும் நேரில் சந்திக்க ஆசைப்பட்ட ஒரே நபர் சிவக்குமார் மட்டும்தான். கடைசி வரை அது நடக்கவில்லை. நானும் கூட்டீட்டு போகவில்லை என்று கூறியிருக்கிறார் இயக்குநர் அமீர்.