விஞ்ஞானத்தில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் சாதனை படைத்த ஜிடி நாயுடு.. ஆங்கிலேயர்களை திரும்பி பார்க்க வைத்த யுத்தி..!

By Mahalakshmi on மே 12, 2024

Spread the love

ஜிடி நாயுடு என்று பெருமையாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை நிகழ்த்தி அமெரிக்கர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்த ஜிடி நாயுடு. தன் இளம் வயதில் படிப்பில் அதிகம் நாட்டம் இல்லாதவராக இருந்தார்.

   

எழுதப் படிக்கத் தெரிந்த இவர் தனக்கு விருப்பமான நூல்களை படித்து அறிவுத்திறனை வளர்த்து வந்தார். இளம் வயதில் கோவையில் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தால் ஜிடி நாயுடு. அந்தத் தொழிலின் நுட்பங்களை கண்டறிந்து பின்னர் திருப்பூரில் பருத்தி தொழிற்சாலையை நிறுவினார். அந்த சமயத்தில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காரணத்தினால் பருத்தி தொழில் சூடு பிடித்தது.

   

தன்னுடைய வர்த்தக திறமையால் குறுகிய காலத்தில் லட்சாதிபதிகளில் ஒருவராக மாறினார் ஜிடி நாயுடு. தனி முதலாளியாக இருக்க விரும்பாத ஜிடி நாயுடு கூட்டு சேர்ந்து பல நிறுவனத்தை தொடங்கினார். அந்த நாட்களில் பணிகளுக்கான வசதிகள், ஓட்டுநர் தங்கும் இடம் என அனைத்தையும் செய்து காட்டினார். ஜிடி நாயுடு பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து ஆங்கிலேயர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர்.

 

தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தையும் நம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்பதால் தன் பெயரில் எதையும் பதிவு செய்து கொள்ளாமல் இலவச பயன்பாட்டிற்கு வைத்திருந்தார். நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் நம் நாட்டிற்கு பயன்படாமல் போனதற்கு காரணம் அரசு அதிகாரி செலுத்தியதால்தான். அன்றைய தினத்தில் அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராக இருந்தாலும் அவர் மீது வரி எய் ப்பு என்று அவப்பெயரும் சொல்லப்பட்டது.

இதனால் மனமுடைந்து போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதை காட்டிலும் வெறுமென இருந்து போகலாம் என்று ஒரு பைசா கூட வருமான வரியை என் பெயரால் செலுத்த மாட்டேன் என்று கூறிவிட்டார். அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர மோட்டார் தொழில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் பல சாதனைகளை செய்து வியக்க வைத்திருக்கின்றார். விதையில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவர் கண்டுபிடித்தது.

சோளச்செடிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி சிறிது காலத்திலேயே 26 கிளையுடன் 18 அடி உயரத்திற்கு வளர செய்தார். சோளச்செடியில் பொதுவாக 3 அல்லது 4 கதிர்கள் இருக்கும். இவர் தனது திறமையால் 39 கதிர்கள் வரை வளர செய்தார். அதோடு மட்டுமில்லாமல் பருத்திச் செடி, துவரை செடி என அனைத்திலும் தன்னுடைய ஆராய்ச்சியை தொடர்ந்து அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தார். இவரைப் பார்த்து வியந்து போன ஜெர்மனியர்கள் அவர் கண்டுபிடித்த அதிசய பருத்தி செடிக்கு நாயுடு காட்டன் என்றும் பெயர் சூட்டில் கௌரவித்தனர். இப்படி பல சாதனைகளை நிகழ்த்தி காட்டி இருக்கின்றார் ஜிடி நாயுடு.