தமிழ் சினிமாவில் நெடுநல்வாடை டாணக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஞ்சலி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கேரளாவில் சேர்ந்த நடிகை அஞ்சலி நாயர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.
கிராமத்து பெண்ணாக அசத்திய இவர் அதனை தொடர்ந்து விக்ரம் பிரபு ஜோடியாக டாணக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார்.
பெற்றோர்கள் ராணுவத்தில் இருந்ததால் சிறு வயது முதலில் துணிச்சலான பெண்ணாக இருந்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அஞ்சலி நாயர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..