ஸ்ரீபிரியாவை காதலித்துவிட்டு, வேறொரு நடிகையை திருமணம் செய்த கார்த்தி.. அடிதடியில் முடிந்த நவரச நாயகன் காதல்.. பிரபலம் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..

By Mahalakshmi on மே 12, 2024

Spread the love

‘நவரச நாயகன்’ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து நினைவெல்லாம் நித்யா, ஆகாய கங்கை போன்ற பல திரைப்படங்களில் நடித்த கார்த்திக், அந்த காலத்தில் பெண்களின் கனவு கண்ணனாகவே வளம் வந்தார்.

   

இவருடைய பேசும் ஸ்டைலும் பாடி லாங்குவேஜும் பலரையும் கவர்ந்திருக்கும். 80’ஸ் மற்றும் 90’ஸ் காலகட்டத்தில் பிளேபாய் என்றால் கார்த்திக் தான் என்று சினிமா துறையை சேர்ந்த பலரும் கூறுவார்கள். அந்த அளவுக்கு நடிகைகள் பலரும் இவரை காதலித்து வந்தார்கள். அப்படி பல நடிகைகளை காதலித்து வந்த கார்த்திகை ஸ்ரீபிரியாவையும் காதலித்து இருக்கின்றார். இவரது காதல் தோல்வி அடைந்தது குறித்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலவரம் குறித்தும் டிவி சோமு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

   

அதில் அவர் கூறியதாவது: “மிகவும் தைரியமாக தன்னம்பிக்கை உள்ளவராக முகத்துக்கு நேராக சொல்லும் தைரியம் கொண்ட நடிகையாக சினிமாவில் அறியப்பட்ட நடிகை ஸ்ரீபிரியா. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், விஜயகுமார் என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் கார்த்திகை விட நான்கு வயது மூத்தவர். அதுமட்டுமில்லாமல் ஒரு திரைப்படத்தில் கார்த்திக்கின் அப்பா முத்துராமுக்கு ஜோடியாக ஸ்ரீ பிரியா நடித்திருக்கின்றார்.

 

அதை தொடர்ந்து கார்த்திக்கும் ஸ்ரீ பிரியாவும் நான்கு திரைப்படங்களில் ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்படி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இப்படி ஒருபுறம் ஸ்ரீபிரியாவை காதலித்து வந்த கார்த்திக் மற்றொருபுறம் ராகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். சோலைக்குயில் என்ற படத்தில் நடித்த போது நடிகர் கார்த்திக்கும் ராகிணியும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த விஷயம் ஸ்ரீபிரியாவுக்கு தெரிய வந்துள்ளது. அப்போது கற்பகம் ஸ்டூடியோவில் பாடல் காட்சி படம் ஆக்கப்பட்டு வந்தது. ராகினியும் கார்த்திக் உடனே இருந்தார். திடீரென்று காரில் வந்து இறங்கிய ஸ்ரீபிரியா வேகமாக மேக்கப் ரூமுக்கு சென்று அங்கிருந்த கார்த்திகையும், ராகினியும் சரமாரியாக தாக்கினார். தடுக்கப்போன இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரையும் சரமாரியாக அடித்தார்.

ஒரு கட்டத்தில் அடித்து ஓய்ந்த ஸ்ரீபிரியா தீடீரென்று பாத்ரூமுக்குள் சென்று தாலிட்டுக் கொன்றார். பின்னர் அனைவரும் சேர்ந்து கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்தார்கள். ஸ்ரீப்ரியா கையில் விஷபாட்டில் உடன் விழுந்து கிடந்தார். உடனே அங்கிருந்து அவரை தூக்கி கொண்டு ஓடினார்கள். அருகில் இருக்கும் விஜயா மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்து ஒரு வழியாக அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டார்கள். இப்படி ஸ்ரீபிரியா செய்த சம்பவத்தை இப்போது வரை எங்களால் மறக்க முடியாது” என பேசி இருந்தார்