#image_title
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார், அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்தப்படத்திற்கு தலைவர் 171 என தற்போதைக்கு டைட்டில் வைத்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
லோகேஷின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு அறிவு இந்த படத்திற்கு சண்டை காட்சிகள் அமைக்க உள்ளனர். இந்த நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல படத்தின் டைட்டில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thalaivar 171 look
இந்தநிலையில் தலைவர் 171 படத்தின் கதை இதுதான் என ஒரு கதை லீக்காகி உள்ளது. அதாவது, படத்தில் ரஜினி மிகப்பெரிய தாதாவாக நடிக்கிறாராம், டைம் டிராவல் செய்து எதிரிகளை அழிக்கும் கதை என சொல்லப்படுகிறது. அதேசமயம் இதுவும் எல்.சி.யு வில் வரும் என்பது உறுதியாம். போதை பொருட்களை கடந்த காலத்துக்கு டைம் டிராவல் செய்து அழிக்கும் கேங்ஸ்டர் தான் ரஜினி.
Rajini vs Rolex
இவர் ரோலக்சின் அப்பாவாக வருவார் என்றும் சொல்கிறார்கள். அப்படி என்றால் நிகழ்காலத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் பெரிய சண்டை இருக்கும் என்றும் நிச்சயம் சூர்யா நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே லியோ எல்.சி.யு இல்லை என லோகேஷ் கூறினார், ஆனால் அது எல்.சி.யு வில் இருப்பது படம் வெளியான பின்னர் தெரிந்தது. அதேபோல் தான் இந்த படமும் இருக்கும் என சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஒரு புதுவிதமான ரஜினியை பார்க்கலாம்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…