#image_title
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வரும் படம் தான் குபேரன்.
சமீபத்தில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தனுஷ் பிச்சைக்காரன் தோற்றத்தில் நிற்க குபேரன் என தலைப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தனுஷ் கார்ப்பரேட் தலைவராக இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதுதான் குபேரன் படத்தின் கதை என ஒரு கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது மும்பை தாராவியில் நடக்கும் கதை. அங்கு பிச்சைக்காரனாக வாழும் தனுஷ், மிகப்பெரிய மாபியாவாக உருவெடுப்பாராம். அவரை பற்றி இன்வெஸ்டிகேட் செய்யும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்து வருகிறாராம். குப்பையில் இருந்து குபேரன் ஆகும் கதாநாயகன் தான் இந்த படத்தில் கதை என கூறுகிறார்கள்.
இதைப்பார்த்த தனுஷ் ரசிகர்கள் கவலை அடைந்து விட்டார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இதுபோன்ற கதைகள் ஏராளமாக வந்துவிட்டன. மீண்டும் மீண்டும் ஏன் அரைத்த மாவையே அரைக்க வேண்டும் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கதை விறுவிறுப்பாக திருப்பங்களுடன் சென்றால் போதும் என கூறி வருகிறார்கள்.
சேகர் கம்முலாவின் படங்கள் எப்போதும் அருமையாக இருக்கும் அதேபோல் இந்த குபேரனும் நிச்சயம் அற்புதமாக வரும் என எதிர்பார்க்கலாம்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…