CINEMA
அந்த பட கதையை ஏன் என்கிட்ட சொல்லலைன்னு ஆதங்கம் இருந்துச்சு.. பேட்டியில் ஓபனாக சொன்ன தனுஷ்.. எந்த படம் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தாலும் தற்போது தன்னுடைய கடின உழைப்பால் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று வருகிறார். நடிகராக அறிமுகமாகி தற்போது பின்னணி பாடகர், இயக்குனர் என்று கலக்கி வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது . அதைத் தொடர்ந்து தற்போது ராயன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டி தொடரி திரைப்படத்தின் வெளியீடு சமயத்தில் எடுக்கப்பட்டது . அப்போது பிரபு சாலமன் அவர்களைப் பற்றி பேசியிருந்தார்.
அதாவது கும்கி திரைப்படத்தை பார்த்து விட்டு இந்த கதையை ஏன் என்னிடம் யாரும் கூறவில்லை என்று ஆதங்கப்பட்டதாகவும், பின்னர் தொடரி திரைப்படத்தின் கதையை கூட நான் கேட்கவில்லை. அவர் ரயிலில் நடக்கும் ஒரு பயணம் என்று தெரிவித்தவுடன் நான் ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் பிரபு சாலமனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என அவர் கூறியிருந்தார்.