Connect with us

அஜித்தோடு அமிதாப் பச்சனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட இயக்குனர் சரண்… ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

CINEMA

அஜித்தோடு அமிதாப் பச்சனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட இயக்குனர் சரண்… ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

ajith and raghuvaran in amarkkalam movie

   

சாக்லேட் பாயாக இருந்த அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக ஆக்கியது சரண் இயக்கிய அமர்க்களம் படம்தான். அந்த படத்தில் அஜித் பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு ஒரு இளைஞனாக நடித்திருப்பார். அந்த படத்தில் அஜித்துக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் ரகுவரன் நடித்திருப்பார். ரகுவரன் கதாபாத்திரம்தான் படத்தில் திருப்புமுனையாக இருக்கும்.

 

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் சரண் நினைத்திருந்தது பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனைதானாம். அப்போது அமிதாப் ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டு வந்தார். அமர்க்களம் படத்தின் தயாரிப்பாளரும் அமிதாப் பச்சனின் நெருங்கிய நண்பர்தானாம். அதனால் அமிதாப்பை நெருங்கி கதை சொல்லும் அளவுக்கு சென்றுள்ளது.

ஆனால் அப்போது அஜித் பல படங்களில் நடித்து வந்ததால் அவரால் அமர்க்களம் படத்துக்கு எப்போது கால்ஷீட் கொடுக்க முடியும் என்பது தெளிவாக தெரியவில்லையாம். அதனால் அமிதாப் பச்சனிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த முடியவில்லையாம். அதனால்தான் அமிதாப் பச்சனுக்கு இணையான ஒரு நடிகராக இருக்க வேண்டும் என்பதால் ரகுவரனை நடிக்க வைத்தாராம்.

Continue Reading
To Top