நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரிய கவுண்டம்பட்டியை சேர்ந்த அருள்ஜோதி என்ற பெண் கூலி வேலை செய்து வருகின்றார். கணவர் மாரிமுத்து பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட மாமனார் சேட்டு (65) மருமகளுக்கு பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தமது பெற்றோரிடம் சொல்லி அழுத அந்தப் பெண் ஒவ்வொரு முறையும் வேறு பகுதிக்கு வீட்டை மாற்றி சென்றுள்ளார். வாடகை வீடு மாற்றி வந்தாலும் சேட்டு விடுவதாக இல்லை. தொடர்ந்து அவர் செல்லும் இடத்தை கண்டுபிடித்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முள்ளுக்குறிச்சி பகுதிக்கு அந்தப் பெண் வீடு மாறி சென்ற நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மருமகளை தேடி மாமனார் சென்றுள்ளார். தனியாக வசித்து அருள்ஜோதி இடம் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். முடியவே முடியாது என்று மருமகள் கூற கத்தியை எடுத்து வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் கொடூரமாக மாமனார் தாக்கியுள்ளார். இதில் அலறி துடித்து அருள்ஜோதியை அருகில் இருந்தவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாமனாரின் வெறிச்செயலால் மருமகள் உயிரிழந்த சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…