அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த கார்டி பிருவா (43) என்பவருடைய மனைவி மிரா (33). இவர்கள் இருவரும் ஆஞ்சியோ உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனிடையே நேற்று இரவு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கார்டி பிருவாவின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். பிறகு அவரையும் அவருடைய மனைவியையும் வீட்டு வாசலில் வைத்து கடுமையாக தாக்கிய ஊர் மக்கள் அவர்கள் மீது தீயை வைத்து கொளுத்தியுள்ளனர்.
உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எரிந்து சாம்பலான தம்பதியினரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அங்கிருந்து கொலைக்கான தடயங்களை சேகரித்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…