“கால்ல விழுந்து வணங்குறேன்.. அவுங்க செஞ்ச் கிரிமினல் வேலையால தான் பிரதீப்..” நேரலையில் கூல் சுரேஷ் பகிர்ந்த சீக்ரெட்..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது  இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் சண்டைகளும் ,சர்ச்சைகளும் அதிக அளவில் வன்மமும் கொட்டி கிடக்கிறது. ஆனாலும் நாளுக்கு நாள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டுதான் வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் மிட் வீக் எவிக்ஷனில் அனன்யாவும், இவரை தொடர்ந்து வார இறுதியில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

cool1

நிக்சன், கூல் சுரேஷ் இருவருமே குறைவான வாக்குகளை பெற்று கடைசி இரண்டு இடங்களில் இருந்த நிலையில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சில வாரங்களாகவே இவர் வீட்டிற்கு போக வேண்டும் எனவும் கூறி வந்ததாலும், விளையாட்டில் ஈடுபாடு இல்லாமல் உட்கார்ந்திருந்ததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

   
cool 1

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு ரூ. 15 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்கூல் சுரேஷ் முதலில் தனது நண்பருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் சிம்புவை சந்திப்பர் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் சந்தானத்தை சந்தித்திருந்தார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்  ஒவ்வொரு போட்டியாளர்களும் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அந்த பேட்டியில் கேட்கப்படும் முக்கியமான கேள்வி பிரதீப் ரெட் கார்டு விவகாரம் தான். இதே கேள்வி கூல் சுரேஷிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘பிரதீப் கண்டிப்பா வீட்டுக்குள்ள இருந்திருந்தா டைட்டில் ஜெயிச்சிருப்பான்.  பிரதீப் ரெட் கார்டுக்கு அஞ்சு பேர் செஞ்ச கிரிமினல் வேலை தான் காரணம்.  விளையாட்டின் மீது அவ்வளவு ஆர்வமாக இருந்தார் .எவ்வளவு திறமைகள் இருந்தாலும் தலையெழுத்து பிரகாரம் தான் எல்லாமே நடக்கும். மேலும் அர்ச்சனாவின் அப்பா தன்னை குறித்து பேசியதற்கு அவர் இந்த பேட்டியில் நன்றியும் கூறினார். ‘  . இதுகுறித்து அவர் கூறிய சுவாரசிய தகவல்கள் அடங்கிய வீடியோ இதோ..

https://www.youtube.com/watch?v=DI_yq0Idsjo