CINEMA
இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள் எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதைதான் கடந்த ஒரு வாரமாக நடக்கும் சர்ச்சைகள் நமக்கு சொல்கின்றன.
இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.
ஆனால் ஒரே ஒரு பாடலை இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு வைரமுத்து இளையராஜா இசையில் எழுதினாராம். அதுவும் நேரடி படம் இல்லையாம். கமல், ராதிகா நடிப்பில் கே விஸ்வநாத் இயக்கிய சுவாதி முக்த்யம் திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தை தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர்.
அப்போது அந்த படத்தின் அனைத்து பாடலையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இளையராஜா இல்லாமலேயே ரெக்கார்ட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுதான் இளையாராஜா இசைக்கு வைரமுத்து எழுதிய கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தபடத்திலும் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.