பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த 30 வயது பெண் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 12-ஆம் தேதி கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு வந்த பெண் குளிக்க சென்றார். அப்போது ஜன்னல் வழியாக ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவன் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரது செல்போனை பிடுங்கி பார்த்தபோது அந்த பெண்ணை வீடியோ எடுத்தது உறுதியானது.
இதற்கிடையே மாணவனின் பெற்றோர் தங்களது மகன் மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறி அதற்கான ஆவணங்களை காண்பித்தனர். இதனால் போலீசார் அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு மாணவனின் மனநலத்தை கருத்தில் கொண்டு ஸ்டேஷன் பெயிலில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…