“தேட உதவியதே அவன் தான்” கோவையில் சிறுமி கொலை வழக்கில்.. போலீஸாரையே அதிரவைத்த அந்த 24 மணி நேர ட்விஸ்ட்..!!

Spread the love

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமி காணாமல் போனதாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுமார் 250 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே இந்த கொடூரக் கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார்.

சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி என்ற வாலிபர், அச்சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி காணாமல் போன போது எதுவும் தெரியாதது போல குற்றவாளி கார்த்தியும் சேர்ந்து தேடுவது போல் நாடகமாடிய அதிர்ச்சித் தகவலை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற குற்றத்திற்குத் துணையாக இருந்த மோகன் என்பவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்து நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறை தரப்பில் அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும் என்றும் ஐஜி ரம்யா பாரதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“ஃபைல்ஸ் எங்கே.. உடனே எடுங்க”… விஜய்யின் ‘ஆக்ஷன்’ லிஸ்டில் இருக்கும் அந்த 3 விஐபிக்கள் யார்?… கசிந்தது லஞ்ச ஒழிப்புத்துறை ரகசியம்…!

தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, கடந்த மே 10-ஆம் தேதி புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற…

4 minutes ago

“ஆட்சி நீடிக்குமா?”.. புதுச்சேரியில் பரபரப்பு கிளப்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.. ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர்…

7 minutes ago

“தனி அறையில் இருந்த சிறுமி”… அந்தரங்க உறுப்புகளை தொட்டு முத்தமிட முயன்ற Boxing coach… விளையாட்டு உலகையே உலுக்கிய கொடூரம்…!

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற காண்டீரவா விளையாட்டு மைதானத்தில் இயங்கி வரும் தனியார் குத்துச்சண்டை கிளப்பில், 17 வயது இளம் வீராங்கனைக்கு…

10 minutes ago

லாரியில் வைத்து சிறுமியை சீரழித்த அண்ணன் – தம்பி… மனைவியே கூட்டிக்கொடுத்த கொடூரம்… கணவனுக்கு மனைவி செய்யும் காரியமா இது…?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி, ஓடும் லாரியில்…

13 minutes ago

என் மகனை அடிச்சே கொன்னுட்டாங்க!”… காதலியின் வீட்டின் முன் பிணமாகக் கிடந்த காதலன்… கதறும் பெற்றோர்.. ராஜஸ்தானில் அரங்கேறிய ஆணவக் கொலை”..!!

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனு (21). சிறந்த பேட்மிண்டன் வீரரான இவர், பள்ளி…

18 minutes ago

நடுரோட்டில் சட்டையை பிடித்து குப்பைத் தொட்டியில் வீசிய டிரம்ப்! அமெரிக்க அதிபரின் பகீர் AI வீடியோ.. உலகளவில் பெரும் அதிர்ச்சி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஸ்டீபன் கோல்பர்ட்டை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுவது போன்ற செயற்கை…

23 minutes ago