பற்கள் சுத்தமாகவும் வெண்மையாகவும் இருந்தால்தான் சிரிக்கும் போது முகத்திற்கே தனி அழகு வரும். ஆனால் பற்களை சரியாக பராமரிக்காததால் அதன் உள்பகுதிகள், வெளிப்புறங்களில் விடாப்பிடியான மஞ்சள் கருப்பு கறைகள் உருவாகி விடும். இதை அகற்ற பல் டாக்டரிடம் சென்றால் சுத்தம் செய்ய பல ஆயிரம் ரூபாய் செலவாகும். அதற்கு மாறாக வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து இந்த கறைகளை எளிதாக நீக்க முடியும்.
பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட், உப்பு ஆகியவை கொண்டு பற்களின் மேல் படியும் கறையை அகற்றலாம். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சிறிதளவு டூத் பேஸ்ட் ஒரு சிட்டிகை உப்பு இவற்றை கலந்து பற்களைத் தேய்த்த பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்தால் கறைகள் தளர்ந்து நீங்கும்.
கொய்யா இலை மென்று துப்புதல் – கொய்யா இலைகளில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் தன்மை பற்களில் இருக்கும் தொற்றுக்களை குறைப்பதோடு கறைகளையும் அகற்றும். தினமும் 2 கொய்யா இலைகளை நன்றாக கழுவி மென்று துப்பவும். தினமும் 2 முறை இதை செய்தால் பற்கள் சுத்தமாகும்.
தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா மிஷ்சர் – தேங்காய் எண்ணெய் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைத்து ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். காலை பல் துலக்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்யவும். பல் சொத்தை ரத்தக்கசிவு போன்றவை குறையும்.
பற்களில் இருக்கும் கறைகளை நீக்க ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை கலந்து பல்துலக்கும் பிரஷ் கொண்டு பற்களை மெதுவாக தேய்க்கவும். இதனால் கறைகள் மட்டுமின்றி வாய் துர்நாற்றம் கூட குறைவதை நீங்கள் உணரலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய வைத்தியங்கள் பற்கள் சுத்தமாகவும் வெள்ளையாகவும் ஜொலிக்க உதவும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…