தமிழகத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மூன்றாம் பருவத்திற்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு ஏற்ப அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களிடம் அதனை வழங்கும்போது அந்த விவரத்தை வழங்கல் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வினியோக மையங்களில் இருந்து வழங்கும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விபரத்தை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது கார் ஓட்டுநரான மாரீசெல்வன் என்பவர், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் ஆதிரா…
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்…
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த…
11 வயதான ஜேசி லீ டுகார்ட் தனது வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றபோது, பிலிப் காரிடோ மற்றும் அவரது…
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள…
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக கணிசமாக உயர்த்துவதற்கான கோப்பிற்கு துணை…