தமிழகத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மூன்றாம் பருவத்திற்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு ஏற்ப அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களிடம் அதனை வழங்கும்போது அந்த விவரத்தை வழங்கல் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வினியோக மையங்களில் இருந்து வழங்கும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விபரத்தை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…