புதுக்கோட்டையில் அதிர்ச்சி.. பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த.. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… நள்ளிரவில் சாலையில் வீசிச் சென்ற கொடூரம்…!!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆலங்குடியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி மாலை, வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக ராசியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அவர் காத்திருந்தபோது, காரில் வந்த இருவர் அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் நள்ளிரவு நேரத்தில் அவரை சாலையிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அருகில் இருந்தவர்களின் உதவியோடு காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மழையூர் போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர்களான மாரிமுத்து (55) மற்றும் சேகர் (55) என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அருணாவின் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. நேற்று போலீசார் மாரிமுத்து மற்றும் சேகர் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Swetha

Recent Posts

“நீ இருக்கறதோட செத்துப்போ” அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…

3 minutes ago

“வெறும் 40 ரூபாய்க்காக இப்படியா?”.. பெண் பயணியை காரில் பூட்டி அறைந்த ஊபர் டிரைவர்… இணையத்தை உலுக்கும் பெண்ணின் வீடியோ வாக்குமூலம்..!!

மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…

22 minutes ago

ஐயோ டாய்லெட்ல என்ன இது?… கமோடிற்குள் இருந்த விசித்திர உருவம்.. உள்ளே எட்டிப்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறியடித்த குடும்பம்..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…

27 minutes ago

“லவ் பண்ணது ஒரு குத்தமாயா?”.. ராணுவ சீருடையில் காதல் ப்ரோபோஸ்.. கேப்டனுக்கு அனுப்பப்பட்ட ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்.. ராணுவம் எடுத்த விபரீத முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…

31 minutes ago

மின்சார வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.. முக்கிய நபர் அதிரடி கைது.. பகீர் வாக்குமூலம்..!!

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…

41 minutes ago

கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்… ஒரே ஒரு கிராம்பால் 6 மாதக் குழந்தையின் மூச்சு நின்று மரணம்.. உ.பி.யில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…

44 minutes ago