“பகீர் சம்பவம்.. 4 அடி நீள கோதுமை நாகம்”…. சிறுவனின் காலணிக்குள் காத்திருந்த அதிர்ச்சி… ஈரோட்டில் நடந்த ஷாக் சம்பவம்…!

Spread the love

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், பள்ளி மாணவன் ஒருவனின் காலணிக்குள் நான்கு அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வங்கி மேலாளர் பிரகாஷ் என்பவரின் மகன், பள்ளி முடிந்து விளையாடிவிட்டு தனது காலணிகளை வாசலில் கழற்றிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்ததை அக்கம்பக்கத்தினர் கவனித்து எச்சரித்தனர். விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், வீடு முழுவதும் பல மணி நேரம் தேடியும் பாம்பு சிக்காத நிலையில், இறுதியில் வாசலில் இருந்த சிறுவனின் காலணிக்குள் பாம்பு சுருண்டு பதுங்கியிருந்ததைக் கண்டறிந்து அதனை லாவகமாகப் பிடித்தார்.

பிடிபட்ட அந்த நாகப்பாம்பு ஆக்ரோஷமாகப் படம் எடுத்து ஆடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் அந்தப் பாம்பு பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. உணவு மற்றும் தங்கும் இடத்தைத் தேடியே பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன என்றும், குறிப்பாக செருப்பு ஸ்டாண்ட், படிக்கட்டுகள் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற மறைவான இடங்களை அவை தஞ்சம் அடையத் தேர்ந்தெடுப்பதாகவும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.

பொதுமக்கள் தற்காப்பு நடவடிக்கையாக, காலணிகளை அணியும் முன் அவற்றை நன்கு தட்டிச் சோதிப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டைச் சுற்றி காடுகள் இருந்தாலோ அல்லது தவளைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தாலோ பாம்புகள் வர வாய்ப்பு அதிகம். எனவே, வீட்டின் நுழைவாயில் கதவுகளில் பாம்புகள் புகாதவாறு சிறிய துளைகளுடைய இரும்பு வலைகளைப் பொருத்துவது நல்லது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள வீடுகளில் காலணிகளைப் பாதுகாப்பான உயரத்தில் வைப்பதும், விழிப்புணர்வுடன் இருப்பதும் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்க உதவும்.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

3 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

3 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

4 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

4 மணத்தியாலங்கள் ago