ஊரை அடிச்சு உலையில் போட்ட கரூர் கம்பெனி… “ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்”… செந்தில் பாலாஜியை மேடையில் வச்சு செய்த முதல்வர் விஜய்…!

Spread the love

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, தமிழக முதல்வர் விஜய் கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து, அரசியல் எதிரிகளைத் தனது பாணியில் கடுமையாகச் சாடியுள்ளார். அரியலூர், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் கூட்டங்களைத் தொடர்ந்து கரூருக்கு வந்த போது, அங்கு நிலவிய கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலே தனது வாழ்வில் தனக்கு அதிக வலியையும் காயத்தையும் கொடுத்த நிகழ்வு என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார். முறையான போலீஸ் பாதுகாப்பு இல்லாததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், காவல்துறை முன்கூட்டியே எச்சரித்திருந்தால் மக்களின் பாதுகாப்பு கருதி தாங்கள் அக்கூட்டத்தைத் தவிர்த்திருப்போம் என்றார். மேலும், இந்த திட்டமிட்ட குளறுபடிகளுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இவ்விழாவில் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். அசம்பாவிதத்தின் வேதனையால் தான் வீட்டில் இருந்ததை, “ஓடி ஒளிந்துவிட்டார்” எனச் சிலர் வதந்தி பரப்புவதாகக் குறிப்பிட்ட அவர், “ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனிக்காரர்தான் ஓடிவிட்டார்” என்று கூறி, ‘வேட்டைக்காரன்’ படப் பாடலான “ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்” என்ற வரிகளைப் பாடி செந்தில் பாலாஜியை மறைமுகமாகக் கிண்டல் செய்தார். அதோடு நிறுத்தாமல், “நான் ஸ்டாலின் சாரைச் சொல்லவில்லை, சிங்கப்பூரில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு முன்னாள் அமைச்சரைச் சொன்னேன்” என்று கூறி, வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் மற்றொரு அரசியல் புள்ளியையும் சாடி, கரூரில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பலத்த கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றார்.

Nanthini

Recent Posts

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

13 minutes ago

“வீட்டை விற்ற பணம் வேணும்…” பேராசையில் மனைவி… மைத்துனர், சகோதரனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…

18 minutes ago

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

25 minutes ago

ஐயோ… பாப்பாவுக்கு என்ன ஆச்சு?… படிக்கட்டில் வழுக்கி விழுந்த… 4-ஆம் வகுப்பு சிறுமி பரிதாப பலி… அதிர்ச்சியில் பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 4-ஆம் வகுப்பு படித்து…

26 minutes ago

யோவ் நிறுத்துயா… காரில் சிக்கிய பைக்கை… அலற அலற அரை கி.மீ இழுத்துச் சென்ற முதியவர்… டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

தெற்கு டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் கார் ஒன்று,…

37 minutes ago