மேற்காசியப் போர்ச்சூழலால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்குத் தான் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இக்கட்டான சூழலில் மத்திய அரசின் முயற்சிகளுக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், இப்போர்க்கால சவால்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம் என்றும் தனது எக்ஸ் (X) தளத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…
மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த 'கார்கி' என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால்…
புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர்…