தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று இரவு சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து ஒருமித்த முடிவெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேலுமணிக்கு இருப்பதால், அவரே சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ள சூழலில், இது எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளதால், கட்சிக்குள் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு உடைந்து சிதறும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த அதிகாரப் போட்டி அதிமுக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நடிகர் விஜய், அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மதிமுக…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜமுக்குட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், விவசாயியுமான சத்தியசீலன் (45) என்பவர் மர்மமான முறையில்…
கடந்த 2021-2023 காலகட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்…
அதிமுகவில் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.…