தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சமூகநீதி ஆகியவற்றைப் பாதுகாப்பேன் என்ற விஜய்யின் நிலைப்பாட்டிற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததாகக் கூறினார். மேலும், 1983-ல் விஜய்யின் தந்தை புதிய இல்லம் கட்டியபோது, அதன் திறப்பு விழாவில் தானும் கலைஞர் கருணாநிதியும் பங்கேற்ற நினைவுகளை விஜய்யிடம் பகிர்ந்துகொண்டார்.
விஜய்யின் பண்பு மற்றும் மரியாதையை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட வைகோ, 18 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் விஜய் தன்னைத் தேடி வந்து நலம் விசாரித்ததை நினைவுகூர்ந்தார். பின்னர் தான் வைகோவின் பேச்சுகளுக்குப் பெரும் ரசிகன் என்றும், விக்கிரவாண்டி மாநாட்டிற்குச் செல்வதற்கு முன்னதாக வைகோவின் உரைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டதாகவும் விஜய் கூறியது தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாக வைகோ தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற பஞ்சாப்பைச் சேர்ந்த 'சைக்கோ'…
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…
கோடை காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிப்போவதைத் தடுக்க, பிரிட்ஜ் இல்லாமலேயே அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்க பல எளிய வழிமுறைகள் உள்ளன.…