சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் கோகுல் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் இருவர் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் கோகுலுடன் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, சிகரெட் பிடித்த விவகாரத்தை வீட்டில் காட்டி கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சிறுவர்கள் கோகுலை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவர்கள் வீடியோ எடுத்தபடியே கூச்சலிட்டதாகக் கூறப்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையைச் செய்துவிட்டு தப்பியோட முயன்ற மூன்று சிறுவர்களையும் அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மது மற்றும் சிகரெட் பழக்கத்தால் சிறுவர்கள் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற பஞ்சாப்பைச் சேர்ந்த 'சைக்கோ'…
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…
கோடை காலத்தில் காய்கறிகள் விரைவில் அழுகிப்போவதைத் தடுக்க, பிரிட்ஜ் இல்லாமலேயே அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்க பல எளிய வழிமுறைகள் உள்ளன.…