CINEMA
எனக்கும் என் கணவருக்கும் விவாகரத்தா..? அவரோட போட்டோ போட எனக்கு விருப்பம் இல்ல.. முதல்முறையாக ஓப்பனாக பேசிய நடிகை சாந்தினி..
சித்து பிளஸ் 2 படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி. சில அழகி போட்டிகளில் கலந்து கொண்ட சாந்தினி, பல விளம்பர படங்களில் நடித்தார், அதை பார்த்த இயக்குனர் பாக்கியராஜ் இவரின் பெயரை டிக் அடித்தார். சாந்தனு ஹீரோவாக நடித்த படத்தில் சாந்தினி ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் சரியா போகாமல் இவருக்கு பட வாய்ப்பே இல்லாமல் போனது.
தெலுங்கு சினிமா பக்கம் போன இவருக்கு அங்கும் சின்ன சின்ன வேடங்கள் தான் கிடைத்தது. அதன்பின் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அருமையாக நடித்து பிரபலமானார். தாழம்பூ, ரெட்டை ரோஜா என சில சீரியல்களிலும் நடித்தார். 2018 ஆம் டான்ஸ் மாஸ்டர் நந்தாவை திருமணம் செய்து கொண்ட சாந்தினி, பல இடங்களில் தன் கணவர் குறித்து சந்தோசமாக பேசுவார். இருவரும் தங்களுடைய போட்டோக்களை அவரவர் சோசியல் பக்கத்தில் பதிவும் செய்வார்.
ஆனால் சமீபகாலமாக தன் கணவருடன் இருக்கும் போட்டோக்களை சாந்தினி பகிருவதில்லை, இதனால் இவர்களுக்கு விவாகரத்து என செய்திகள் வெளியாக தொடங்கியது. இதுகுறித்து நடிகை சாந்தினி பேசும்போது, நான் சந்தோசமான கல்யாண வாழ்க்கையில் இருக்கிறேன். என் கணவர் போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிடாததால் பலர் இப்படி சொல்கின்றனர். நாங்கள் இருவருமே பெர்சனல் போட்டோக்களை பகிரக்கூடாது என்ற முடிவில் இருக்கிறோம்.
பெர்சனல் வாழ்க்கை குறித்து நாங்கள் பதிவிட விரும்பவில்லை, இப்போ கூட நாங்கள் ஒரு ட்ரிப் சென்று வந்தோம், மெமரிஸ்க்காக சில போட்டோக்கள் எடுத்தோம் ஆனால் அதை பதிவிடவில்லை. என் கணவர் தான் எனக்கு எல்லாம், நான் அவரை பிரிந்து இருக்கவே மாட்டேன் என கூறியுள்ளார் நடிகை சாந்தினி.