Connect with us

CINEMA

கோலாகலமாக நடந்து முடிந்த வானத்தைப்போல ‘துளசி’ திருமணம்.. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்..!

சன் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியலில் முதலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா அவர்களுக்கு நேற்று திருமணம் கோலகாலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றது.

   

சன் டிவியில் தினமும் 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப்போல. இந்த சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகின்றது. அண்ணன் தங்கைக்கு இடையே இருக்கும் பாசத்தை மையக்கதையாக வைத்து இந்த சீரியலின் கதைகளும் நகர்ந்து வருகின்றது.

எப்போதும் போல அண்ணன் தங்கையை தவிர மற்ற அனைவரும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து இவர்களின் பாசத்தை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்வேதா, தமன் சின்ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துளசி கதாபாத்திரத்தில் இருந்து ஸ்வேதா விலகியதை தொடர்ந்து வன்யா ஆனந்த் தற்போது நடித்து வருகிறார்.

அதேபோல சின்ராசுவாக நடித்த தமனும் இந்த சீரியலில் இருந்து விலக அவருக்கு பதிலாக ஸ்ரீகுமார் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல கதாபாத்திரங்கள் தொடர்ந்து சீரியலில் இருந்து மாறினாலும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை ஸ்வேதா இந்த சீரியலில் இருந்து விலகிய பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

#image_title

சின்னத்திரையில் கலக்கி வரும் ஸ்வேதாவுக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் தனது நீண்ட நாள் காதலரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விராந்த் என்பவரை நிச்சயம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் நேற்று ஸ்வேதாவுக்கும் அவரது காதலற்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்ற முடிந்தது. ஸ்வேதா தனது instagram பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top