Connect with us

CINEMA

பிரதீப் விஷயத்தில் கமல் செய்தது நியாயமா.. மீண்டும் ரீ என்ட்ரி தருவாரா பிரதீப்..? நடக்கப் போவது இது தான்..

பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது முதல் இன்று வரை சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் சூடான விவாதங்கள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அவரை வெளியேற்றும் அளவுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. கெட்ட வார்த்தை பேசுவதை அவரே ஒத்துக்கொண்ட நிலையில், அவரை கமல் எச்சரித்து விட்டிருக்கலாம் என்றும் விவாதம் நடந்து வருகிறது. ஆனால், கமலில் தனிப்பட்ட ஈகோ காரணமாக அவர் வெளியேற்றப்படவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.

Kamal

   

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவமும் கூறப்படுகிறது. அதாவது குணா படம், மலை உச்சியில் நடந்த போது, ஒரு காட்சிக்காக புகை மூட்டம் தேவையாக இருந்துள்ளது. உதவி இயக்குநரிடம் புகைமூட்டம் ஏற்பாடு செய்யுமாறு படத்தின் இயக்குநர் கூறிய நிலையில், பல மணி நேரமாகியும் அவர் புகைமூட்டம் ஏற்படுத்தவில்லை. தாமதமானதால் அந்த உதவி இயக்குநர் மீது கோபபப்பட்ட படத்தின் கமல், புகைமூட்டம் ஏற்படுத்த இவ்வளவு நேரமா என மைக்கில் சத்தமிட்டுள்ளார். ஆனால் கமல் அங்கு சென்று பார்த்த போது உறைபனியால் விறகுகள் முழுவதும் ஈரமாக இருந்ததால், விறகுகளை எரிய வைத்து புகை மூட்டம் ஏற்படுத்த அந்த உதவி இயக்குநரால் முடியவில்லை என்ற சிக்கலை நேரடியாக உணர்ந்த கமல், அவரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Kamal

இப்படிப்பட்ட கமல், பிரதீப் விஷயத்தில் தவறு செய்ய வாய்ப்பு இல்லை. அதே வேளையில், வீட்டுக்குள் இருப்பவர்கள், இந்த விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டார்களா, இந்த விஷயத்தில் என்னையும் போட்டியாளரில் ஒருவராக சேர்த்து விட்டீர்களா, என கடந்த சனியன்று நடந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கோபமாக கேட்டார். நீங்கள் சொன்னது உண்மை இல்லை எனில், அதற்காக விளைவுகள் உங்களுக்கு உண்டு என்றும் எச்சரித்துள்ளார். இதற்கிடையே பிரதீப் மீண்டும் அந்த வீட்டுக்குள் வர வாய்ப்பே இல்லை என்பதுதான் இன்றைய நிலவரப்படி உறுதியான தகவலாக இருக்கிறது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற முறையில், பிரதீப் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top