திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் கிராமத்தைச் சேர்ந்த துணி வியாபாரி குமார் மற்றும் சத்யா தம்பதியருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இதில் 2 இரட்டை ஆண் குழந்தைகள் உட்பட 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பெற்றோர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற நிலையில், 6 வயது சிறுவன் சோமநாத் விளையாடும் போது எதிர்பாராதவிதமாக பலூனை விழுங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த பலூன் தொண்டையில் மாட்டி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிறுவன் மயங்கி விழுந்தான்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகச் சிறுவனை நாட்றம்பள்ளி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்து தொண்டையில் சிக்கியிருந்த பலூனை அகற்றினார். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற மாநகரப் பேருந்து ஓட்டுநர் கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட…
தமிழகத்தில் தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, அரசின் மீதான முதல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கடுமையான ஆட்சிக்கிடையே, கேரளாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபரும் பயண வழிகாட்டியுமான அருனிமா அங்கு சென்ற பயணம்…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் (CPI)…
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பல ஊழியர்களைத்…
தமிழ்நாட்டில் கல்வித்துறை வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட சமூகங்களைச்…