வட்டி பணத்தை கொடு.. இல்லன்னா உன் கிட்னியை கொடு.. பாஜக நிர்வாகி மிரட்டலால் அச்சம்… பெண் பரபரப்பு புகார்…!!

Spread the love

ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சுகுணா (37), தனது குடும்பத் தேவைக்காக அசோகபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கிருஷ்ணகுமாரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு அசல் மற்றும் வட்டியையும் சேர்த்து, வாங்கிய தொகையை விட அதிகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளார். இருப்பினும், கிருஷ்ணகுமார் மேலும் கூடுதலாக வட்டி மற்றும் அசல் தொகையைக் கேட்டு, சுகுணாவைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

பணம் தராவிட்டால் உனது கிட்னியை விற்றாவது பணத்தைக் கட்டுமாறும், கிட்னியை விலைக்கு வாங்கும் ஆட்களையும் மற்றும் அதற்கான மருத்துவமனையையும் தனக்குத் தெரியும் என்றும் கிருஷ்ணகுமார் தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்து, 2 பெண் மகள்களுடன் தனியாக வசித்து வரும் தனக்கு, இந்த பாஜக நிர்வாகியிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சுகுணா ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) புகார் மனு அளித்துள்ளார்.

Soundarya

Recent Posts

அடப்பாவிகளா… வயசானவங்க உயிரோட விளையாடிட்டீங்களே… ஆடம்பர வாழ்க்கைக்காக மூதாட்டியிடம்… கைவரிசை காட்டிய காதல் ஜோடி கைது…!

கோவையில் வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 30ஆம் தேதியன்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற மூதாட்டியிடம்,…

3 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க…” சேற்றுக்குள் புதைந்த மூன்று மாடி கட்டிடம்… ஒரே இடத்தில் பிணமாக மீட்கப்பட்ட 24 பேரின் பேரதிர்ச்சி சம்பவம்…!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கோரப் பேரழிவு வெள்ளத்தில் சிக்கி, 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின்…

8 minutes ago

“காலனிக்காரனுங்க உட்கார்ந்துட்டாங்க”…. நாற்காலியை கொளுத்திய முன்னாள் தலைவர்… வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி தீண்டாமை சம்பவம்….!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியில், சாதியப் பாகுபாட்டின் கொடூரத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அவ்வூராட்சியின்…

28 minutes ago

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. “உடலைக் கூட பார்க்கல… ஆனா பொம்மையை வச்சு இறுதிச்சடங்கு”…. நேபாள வெள்ளத்தில் கதறும் பெண்ணின் சோகம்…!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளம், பல கிராமங்களை தடம்…

42 minutes ago

ஜன்னல் வழியா வந்த கொடூரம்….. நர்ஸ் கதற கதற பலாத்காரம்… கொலை பண்ணிட்டு போய் நிம்மதியா தூங்கியிருக்கான்…. ஹைதராபாத் போலீசாரையே உரையவைத்த கொடூரனின் சைக்கோத்தனம்….!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடிஷரீஃப் பகுதியில், பணி நிமித்தமாக தங்கியிருந்த 24 வயது செவிலியர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை…

51 minutes ago

“ஊழல்னா ஏன் இவ்ளோ பதற்றம்?”.. ஃபோன் வயர் அறுந்துபோச்சு…. பெயரைச் சொல்லாமலே திமுகவை கதறவிட்ட தவெக…. ஒரே போஸ்ட்டில் சூடான தமிழக அரசியல் களம்…!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், "ஊழல்" என்ற…

1 மணத்தியாலம் ago