CINEMA
விஜய் இப்படி பண்றதுலாம் காமெடியா இருக்கு…! தளபதியை வம்புக்கு இழுக்கும் பிரபலம்..
விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் “GOAT” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தனது 69 ஆவது திரைப்படத்தில் ஹெச்.வினோத்துடன் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
தனது 69 ஆவது திரைப்படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடப்போகிறார். ஆதலால் அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளார் விஜய். அந்த வகையில் சமீபத்தில் விஜய் கொரட்டூரில் சொந்தமாக ஒரு சாய் பாபா கோவிலை கட்டியுள்ளார் என செய்திகள் வலம் வந்தன.
அது சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வைரலானது. இந்த சாய் பாபா கோவிலை விஜய் தனது அம்மாவிற்காக நிறுவியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. விஜய் கிறுஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை பலரும் அறிந்திருப்போம். அவர் அரசியலில் களமிறங்கவுள்ளதால் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறு சாய் பாபா கோவிலை கட்டியுள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, “விஜய் இந்த கோவிலை சொந்தமாக கட்டியிருப்பார் என்று நம்பமுடியவில்லை. ஏனென்றால் அவரது தந்தையான எஸ்.ஏ.சி. ஒரு தூய கிறுஸ்துவர். அவர் ஹிந்து கோவில்களுக்குச் சென்றால் கூட அங்கிருக்கும் கடவுளைப் பார்த்து இயேசுவே என்றுதான் வேண்டுவார். அந்தளவுக்கு தூய கிறுஸ்துவரான எஸ்.ஏ.சியின் மகன்தான் விஜய்.
மேலும் ஹெச்.ராஜா, ஜோசஃப் விஜய் என்று நக்கலாக பேசியபோது, ஆமாம் நான் ஜோசஃப் விஜய்தான் என்று அறிக்கை கொடுத்தவர் விஜய். அப்படிபட்ட விஜய், சாய் பாபா கோவிலுக்கு சென்று புகைப்படம் வெளியிடுவது ஒரு பக்கம் காமெடியாகவும் மறுபக்கம் அவர் ஒரு அரசியல்வாதியாக ஆனதினால் இப்படி எல்லாம் வேஷம் போடவேண்டியதாக இருக்கிறதே என்ற ஒரு வருத்தமும் எனக்கு ஏற்படுகிறது. விஜய் அரசியலுக்காக செய்த விஷயம்தானே தவிர விஜய் சாய் பாபா கோவிலை கட்டியிருப்பார் என்பதை நம்பமுடியவில்லை” என கூறியுள்ளார்.