சட்டம் காப்பவர்களா இவர்கள்..? மாற்றுத்திறனாளியை தாக்கிய பீகார் போலீசார்.. இணையத்தை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்…!

Spread the love

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்திலுள்ள பிதுபூர் சந்தையில், ‘டயல் 112’ அவசர உதவிப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள், மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறவியிலேயே இரண்டு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்த 19 வயதான மனிஷ் குமார் என்ற வாலிபரே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்பகுதியில் உள்ள இரு கடைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறிய தகராறு தொடர்பாக விசாரிக்க ஒரு பெண் காவலர் மற்றும் ஆண் காவலர் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. அப்போது அவர்கள் கடையில் இருந்தவர்களிடம் அநாகரிகமான வார்த்தைகளால் வசித்துள்ளனர். அங்கிருந்த மாற்றுத்திறனாளி வாலிபர் மனிஷ் குமார், அவ்வாறு கெட்ட வார்த்தைகளைப் பேச வேண்டாம் என்று தடுத்ததால், ஆத்திரமடைந்த காவலர்கள் அவரை இரக்கமின்றி மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களையும் எழுப்பியது. இந்த சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் வைஷாலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாற்றுத்திறனாளியைத் தாக்கிய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட ஒரு காவலரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

7 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

8 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

8 மணத்தியாலங்கள் ago