Connect with us

TRENDING

என்ன சொல்லுறீங்க..! பிக் பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… அப்படி யாருலாம் வர போறாங்க….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  மக்கள் மனதை வென்ற  பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7,  இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.  இதை தொடர்ந்து  சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் பைனல் செலிப்ரேட்டின் நடைபெற போகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள்; இதில் யாரெல்லாம் வருவார்கள் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருகிறார்கள்.

   

மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்குபெற்ற  இந்த நிகழ்ச்சி, தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே  இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதற்கிடையில் கடந்த வாரம்  எலிமினேட்  செய்யப்பட்டு விசித்ரா வெளியேறினார். இவர் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு நல்ல போட்டியாளராக இருந்தவர், இருப்பினும் அவர் வெளியே செல்ல காரணம் சில பேரிடம்  தேவையில்லாமல் வைத்து கொண்ட வாக்குவாதம் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  பைனல் செலிப்ரேஷனில் கலந்து கொள்ள அனைத்து போட்டியாளர்களும் வீட்டில் உள்ள சென்று கொண்டாடுவது வழக்கம். அதை போல், இந்த சீசன் 7 நிகழ்ச்சியிலும்  இறுதி வார  பைனல் செலிப்ரேஷன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இந்த வாரம் முழுவதும் சிறப்பு டாஸ்க் வைக்கப்பட்டு கோலாகலமாக பைனல் செலிப்ரேட்டின் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரீத்ப் வருவாரா மாட்டாரா என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் வரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். அநாகரிகமாக பேசுகிறார் என்று சக போட்டியாளர்கள் இவரை பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே அனுப்புங்கள் என்று வாக்குமூலம் அறையில் தங்களின் கருத்தை தெரிவித்தார்கள். இதனால் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்யை வெளியே அனுப்பினார்.

ரெட் கார்டு வாங்கியவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்பதால் இந்த பைனல் செலிப்ரேஷனில் பிரதீப் கலந்து கொள்ளமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது.  இந்த சமயத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் கூல் சுரேஷ் , அக்சயா மற்றும் வினுஷா ஆகிய 3 போட்டியாளர்கள் வந்து விட்டார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in TRENDING

To Top