Connect with us

CINEMA

விஜய்யை பார்த்து கெட்டுப்போன பரத்? கெரியரையே குளோஸ் பண்ணிய ஆக்சன் இயக்குனர்! அடப்பாவமே

“பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பரத். முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை ஓரளவு கவர்ந்த நடிகராகவே திகழ்ந்தார் அவர். தொடக்கத்தில் டான்சராக தனது கெரியரை தொடங்கிய பரத், “பாய்ஸ்” திரைப்படத்தின் ஆடிஷனுக்குச் சென்று ஷங்கரால் 5 பேரில் ஒரு ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டார்.

   

“பாய்ஸ்” திரைப்படத்தை தொடர்ந்து “காதல்”, “வெயில்” போன்ற திரைப்படங்கள் அவரது கெரியரில் மிக முக்கியமான திரைப்படங்களாக அமைந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து அவர் நடித்த எந்த திரைப்படமும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. ஒரு சிறந்த நடிகராக பரத் திகழ்ந்து வந்தாலும் இத்தனை ஆண்டுகளாகியும் அவரது கெரியரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் இல்லையே என்பது கோலிவுட் ரசிகர்களில் கவலையாக இருக்கிறது.

இதனிடையே பரத் ஒரு புதிய திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளிவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஊடகவியலாளர் சுபைர், “பரத் முதலில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின் விஜய் படங்களை போலவே ஆக்சன் பாணியில் களமிறங்கினார். ஆனால் ஆக்சன் ஹீரோவாக அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சரியாக போகவில்லை. இதுதான் பரத்தின் கெரியர் வீழ்ச்சிக்குப் போனதற்கு காரணம்” என்று கூறியுள்ளார்.

பேரரசு இயக்கிய “பழனி” திரைப்படத்தில்தான் பரத் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதற்கு முந்தைய திரைப்படங்களான “பட்டியல்”, “எம் மகன்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Continue Reading

More in CINEMA

To Top