கைத்தடியை வைத்து குகையையே தோண்டிய சாது? வெள்ளைக்காரனை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த தரமான உண்மை சம்பவம்!

Spread the love

பட்டப்படிப்பை விட அனுபவ கல்வியே சிறந்தது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அதற்கு உதாரணமாக வரலாற்றில் நடந்த ஒரு ஆச்சரிய சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1864 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த சமயத்தில், சிம்லாவை கோடைக்காலத் தலைநகரமாக அறிவித்தனர். அறிவித்தால் மட்டும் போதுமா? பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் சிம்லாவிற்கு பயணம் செல்வதற்கு ஒரு முறையான வழித்தடம் வேண்டுமே. அந்த காலகட்டத்தில் சிம்லாவிற்குச் செல்ல முறையான வழித்தடம் இல்லை. பாதைகள் மிகவும் சிக்கலான ஒன்றாகவும் கடினமான ஒன்றாகவும் இருந்தது.

ஆதலால் பிரிட்டிஷார் சிம்லாவிற்கு ரயில் விடலாம் என முடிவு செய்தனர். ஆனால் அந்த பாதை மலைப்பாதை என்பதால் அங்குள்ள மலைப்பாறைகளை பிளந்து குகையாக ஆக்கி அதன் பிறகுதான் தண்டவாளம் அமைக்க முடியும். ஆதலால் அதற்கான பணிகளை தொடங்கியது பிரிட்டிஷ் அரசு.

முதலில் டெல்லியில் இருந்து கால்கா என்ற இடம் வரை ரயில் பாதை போடப்பட்டது. இந்த பாதையை மிகவும் எளிமையாக உருவாக்கிவிட்டார்கள் பிரிட்டிஷார். ஆனால் கால்காவில் இருந்து சிம்லா வரையிலான மலைப்பாதைதான் அவர்களுக்கு சவாலாக இருந்தது.

பல மலைப்பாறைகளை குடைந்து குகைகளாக ஆக்கி ரயில்பாதை போடவேண்டும். மிகப்பெரிய கடின உழைப்பை வேண்டியிருந்த இந்த பணிகளை பல நூறு தொழிலாளர்கள் வெள்ளைக்கார எஞ்சினியர் ஒருவரின் தலைமையில் தொடங்கினார்கள். ஆனால் குகைகளை உருவாக்குவதில் தவறுகள் நிகழ்ந்தது. இதனால் பிரிட்டிஷ் அரசின் பணம் வீணானது.

இதனால் இந்த திட்டத்தில் எஞ்சினியராக இருந்த பாரோக் என்பவருக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் அதிகளவு தொகையை அபராதமாக விதித்தது. இந்த அபராத தொகையை கட்ட முடியாததால் தற்கொலை செய்துகொண்டார் பாரோக்.

அதன் பின் ஹாரிங்க்டன் என்ற எஞ்சினியர் தலைமையில் இந்த பணிகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அவருக்கு இந்த பணியை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. மலைப்பாதைக்காக சரியான முறையில் குகையை தோண்ட வேண்டும். ஆனால் ஹாரிங்கட்னுக்கு தலைகால் புரியவில்லை. ஹாரிங்க்டன் அவ்வாறு திணறிக்கொண்டிருந்த சமயத்தில்தான் பால்கு ராம் என்ற சாது ஹாரிங்க்டனுக்கு அறிமுகமானார்.

பால்கு ராம் ஒரு வயதான சாது. அந்த மலைப்பகுதியில் பல வருடங்களாக ஆடு மேய்த்து வந்தவர். அந்த மலைப்பகுதியில் உள்ள மூலை முடுக்கெல்லாம் அவருக்கு அத்துப்பிடி. தனது அனுபவ அறிவை கொண்டு அந்த சாது, தனது கைத்தடியை வைத்து மலைப்பாறையை தட்டி பார்த்தார். ஒவ்வொரு முறை அவர் தட்டும்போதும் அந்த பாறை ஒலி எழுப்பியது. அந்த ஒலியை வைத்தே கணக்கிட்டு “இந்த இடத்தில் தோண்டுங்கள், அந்த இடத்தில் தோண்ட வேண்டாம்” என்று எஞ்சினியருக்கு ஆலோசனை கூறினார்.

அவரின் ஆலோசனையின் பெயரில் அவர் சொன்ன இடத்தில் குகை தோண்டப்பட்டது. அந்த ரயில்பாதைக்கு ஏற்றவாறு அந்த குகை அமைந்தது. இதனை பார்த்த வெள்ளைக்கார எஞ்சினியரும் தொழிலாளர்களும் வியந்துபோனார்கள்.

அதன் பின் பால்கு ராமின் ஆலோசனையின் பெயரில் 103 குகைகள் தோண்டப்பட்டன. அதன் பின் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ஒரு வழியாக சிம்லாவிற்கு ரயிலும் விடப்பட்டது. இவ்வாறு தனது கைத்தடியை வைத்து அதிசயம் செய்த பால்கு ராமிற்கு 1903 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராயாக இருந்த கர்சன் பதக்கம் தந்து பால்குவை கௌரவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டில் சிம்லாவில் தொடங்கப்பட்ட ஒரு ரயில் அருங்காட்சியகத்திற்கு பால்கு ராமின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

எடப்பாடி தலையில் பேரிடி… அதிமுகவை உடைக்கும் சி.வி.சண்முகம்?… விஜய்க்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ-க்கள்…. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

55 seconds ago

“எடப்பாடிக்கே பதவிப் பிரமாணம்”…. லோகேஷுக்கு இடைக்கால சபாநாயகர் பதவி?… சட்டசபை வரலாற்றில் நடக்கப்போகும் அந்த அதிசயம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல்…

9 minutes ago

“விஜய்க்கு அதிமுக ஆதரவு கொடுக்குமா?… செய்தியாளர் கேள்விக்கு சி.வி.சண்முகத்தின் ‘பளீச்’ பதில்!… கோட்டையில் நடக்கப்போகும் ‘அந்த’ ட்விஸ்ட்…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…

10 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ‘கிளைமாக்ஸ்’…. திமுக, அதிமுக-வின் 1 கோடி ஓட்டுகளை ‘சைலண்டாக’ தட்டித்தூக்கிய விஜய்… தவெக செய்த தரமான சம்பவம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் அரங்கேறியுள்ளது.…

19 minutes ago

“முதலமைச்சராகும் விஜய்!… முதல் கையெழுத்திடப்போகும் அந்த 2 முக்கிய கோப்புகள் எது?… தமிழகமே எதிர்பார்க்கும் ‘மெகா’ அறிவிப்பு”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான…

24 minutes ago

BREAKING: இபிஎஸ் வீட்டில் தவெக தலைவர்கள்… சற்றுமுன் பரபரப்பு… அதிர்ச்சியில் திமுக…!

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள்…

25 minutes ago